நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வேர்க்கடலை பக்கோடா இப்படிதான் செய்யனுமா..!! ரெசிபி இதோ...

 நிறைய செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் மாலையில் சாப்பிட நொறுக்குத் தீனியாக தரலாம்.


வேர்க்கடலை பகோடா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ். இதை வீட்டிலேயே எந்த அஜினமோட்டோ கலப்படமும் இன்றி குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். அதோடு நிறைய செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் மாலையில் சாப்பிட நொறுக்குத் தீனியாக தரலாம். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை - 1 1/2 கப்

கடலை மாவு - 1/2 கப்

அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 5 பற்கள்

வரமிளகாய் - 5

மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - 1 டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை

முதலில் வேர்க்கடலையை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின் பூண்டு மற்றும் வரமிளகாயை நீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதில் வேர்க்கடலையை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வேர்க்கடலை பக்கோடா ரெடி.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!