நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பானை மாதிரி இருக்க தொப்பைய குறைக்கனுமா? தினம் காலையில் வெறும் வயிற்றில் இந்த மசாலா டீயை குடிங்க!

 எடை குறைப்பதில் உணவு மற்றும் பானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நாம் சமையலறையில் பயன்படுத்தும் சில மசாலாப் பொருட்கள் உங்கள் உடல் எடையை குறைக்க உதகின்றது.

அந்தவகையில் உடல் எடையை எளிதில் குறைக்க கூடிய மசாலா டீயை ஒன்றினை எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கே பார்ப்போம்.   

தேவையான பொருட்கள்

  • கொத்தமல்லி விதை - 2 டீஸ்பூன்
  • பெருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்
  •  சீரகம் - 2 டீஸ்பூன்
  • கேரம் விதைகள் - 2 டீஸ்பூன்
  •  இலவங்கப்பட்டை - சிறிதளவு
  • தண்ணீர் - தேவைக்கேற்ப
  • எலுமிச்சை சாறு -சிறிதளவு
  • தேன் - சிறிதளவு

தயாரிக்கும் முறை


  • முதலில் அனைத்து மசாலாப் பொருட்களையும் ஒரு கடாயில் அல்லது பாத்திரத்தில் போட்டு, அவற்றில் இருந்து வாசனை வரும் வரை நன்றாக வறுக்கவும். முடிந்ததும், அவற்றை ஒதுக்கி வைத்து குளிர்விக்க விடவும்.

  • அனைத்தையும் தூள் வடிவில் அரைத்து, பின்னர் பயன்படுத்தவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

  • கொதித்த பிறகு, இந்த விதைகளின் 2 டீஸ்பூன் கலவையைச் சேர்த்து, கொதிநிலையில் சேர்ப்பதற்கு முன் ஒரு சிறிய துண்டு இலவங்கப்பட்டை அல்லது பொடியாக எடுத்துக் கொள்ளவும்.

  • தீயை குறைத்து, இந்த அனைத்து மசாலாப் பொருட்களுடன் தண்ணீரை 5-10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

  • நன்றாக கொதிந்ததும், தீயை அணைக்கவும். பின்னர், ஒரு கோப்பையில் டீயை வடிகட்டி அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். சுவைக்காக சிறிதளவு தேனையும் சேர்க்கலாம்.  

நன்மைகள்


சில மசாலாப் பொருட்கள் எளிதாக செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன. மற்றவை உங்கள் உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகின்றன. மேலும் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கின்றது. 


ALSO READ : காலை எழுந்தவுடன் 3 டம்ளர் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அதியம் என்னென்ன?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!