நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொத்தமல்லியில் டீ! அரை நொடியில் ரெடி - இவ்வளவு பலனா?

 கொத்தமல்லி இலைகள் பொதுவாக ஒவ்வொரு வீட்டிலின் சமையலறையிலும் தென்படும் ஒரு வாசனை தாவரமாகும்.


பல ஆண்டுகளாக, உணவுகளின் சுவையை அதிகரிக்கவும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பல்வேறு வழிகளில் கொத்தமல்லி தழைகள் பயன்படுத்தப்படுகிறது.

சிலர் கொத்தமல்லி இலைகளைப் பயன்படுத்தி சட்னி தயாரிப்பார்கள். கொத்தமல்லி இலைகள் நரம்புகளை ஊக்குவிக்கும் ஒரு நல்ல மருந்தாக செயல்படுகிறது. இது மறதியை கட்டுபடுத்தி நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.


மேலும் வாய்ப்புண்களை குணப்படுத்தவும் சுவாச புத்துணர்ச்சியை அதிகரிக்கவும் செய்கின்றன.

உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க கொத்தமல்லி தேநீர் குடிப்பதை பழக்கமாக்கி கொள்ளலாம். இதனை தயாரிப்பது என்பது மிகவும் எளிது.  

கொத்தமல்லி இலை டீ செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  1. கொத்தமல்லி இலை - 1 கப்
  2. நட்சத்திர பூ - 1
  3. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
  4. தண்ணீர் - 1 ½ கப்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைக்க வேண்டும்.

ஒரு நிமிடம் கழித்து, கொதிக்கும் தண்ணீரில் நட்சத்திர பூ மற்றும் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.


பின்னர் அதனுடன் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். இப்பொது பாத்திரத்தை மூடி சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர், அடுப்பை அணைத்து விட்டு, கொதிக்க வாய்த்த தண்ணீரை வடிகட்டி ஒரு கப்பில் ஊற்றவும். அவ்வளவுதான் கொத்தமல்லி தேநீர் தயார். நீங்கள் விரும்பினால் இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!