நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பல்வலி பிரச்சனையா? இதையெல்லாம் கண்டிப்பா சாப்பிடாதீங்க....

 Dental Care: பல்வலி பிரச்சனை உங்களுக்கு உள்ளதா? அப்படி இருந்தால், நீங்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன. 


  • பல் வலியில் இவற்றை உட்கொள்ளாதீர்கள்.
  • இனிப்பு, டாஃபி, சாக்லேட் போன்றவற்றை மறந்தும் உட்கொள்ளக்கூடாது.
  • பல்வலி இருந்தால் குளிர்பானம் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

பல்வலியில் தவிர்க்க வேண்டிய உணவுகள்: இந்நாட்களில் பெரும்பாலான மக்கள் பல்வலியால் அவதிப்படுகிறார்கள். பல காரணங்களால் பல்வலி ஏற்படுகிறது. எனினும், பெரும்பாலும், பல் சொத்தை அல்லது கேவிடி இருப்பதால் பல்லில் வலி இருக்கும். அதே நேரத்தில், விஸ்டம் டூத் வரும்போதும் உங்கள் பற்களில் வலி ஏற்படலாம். பற்களில் பிரச்சனை இருந்தால், சில பொருட்களை மறந்தும் உட்கொள்ளக்கூடாது. 

சில பொருட்களை உட்கொள்வதால், உங்கள் பிரச்சனை இரட்டிப்பாகும். பற்களில் வலி அல்லது பிற பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் என்னென்ன பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

பல் வலியில் இவற்றை உட்கொள்ளாதீர்கள்:

இனிப்பு பொருட்கள்:

பல்வலியின் போது இனிப்புப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் குறிப்பாக இனிப்பு, டாஃபி, சாக்லேட் போன்றவற்றை மறந்தும் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உங்கள் பற்களின் வலியை அதிகரிக்கும்.

மாவுச்சத்துள்ள உணவுகள்:

பல்வலி இருந்தால் மாவுச்சத்துள்ள பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ரொட்டி மற்றும் உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் உள்ளது. அவற்றை உட்கொள்வதால் பல் வலி அதிகரிக்கும். இதனுடன் மிளகாய் மற்றும் காரம் அதிகம் உள்ள பொருட்களை சாப்பிட வேண்டாம்.

குளிர்பானம்:

பல்வலி இருந்தால் குளிர்பானம் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் உள்ள சோடா மற்றும் சிட்ரிக் அமிலம் உங்கள் பற்களின் அசௌகரியத்தை அதிகரிக்கும். எனவே பல்வலியின் போது இவற்றை உட்கொள்ள வேண்டாம்.

சிட்ரஸ் பழங்கள்:

பல்வலி ஏற்பட்டால் சிட்ரஸ் பழங்களை கண்டிப்பாக சாப்பிட வேண்டாம். இதில் ஆரஞ்சு, எலுமிச்சை, மாம்பழம், திராட்சை போன்றவை அடங்கும். ஏனெனில் அவற்றை உட்கொள்வதால் உங்கள் பற்களின் வலி அதிகரிக்கும்.

மது:

மது அருந்துவதால் வாய் வறட்சி ஏற்படும். வறண்ட வாய் என்றால் வாயில் உமிழ்நீர் குறைவாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உணவு பல்லில் ஒட்டிக்கொள்ளும். இது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!