நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்த தியான்வென் -1 விண்கலம்.

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்த தியான்வென் -1 விண்கலம்.

சீனாவின் தியான்வென் -1 ஆய்வுக்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிக்கரமாக நுழைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனாவின் ஹைனான் மாகாணத்திலிருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்ட தியான்வென் கலம் சுமார் 7 மாத பயணத்துக்கு பின்னர் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்துள்ளது.

இது வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல், மண் மற்றும் நீர் உள்ளதா என்பது குறித்த ஆய்வுக்காக சீனா தியான்வென் 1 விண்கலத்தை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!