நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முகக் கவசம் அணியாதவர்களுக்கான அபராதம் ரூ.200 லிருந்து, ரூ.1000 ஆக உயர்வு: மும்பை மாநகராட்சி

முகக் கவசம் அணியாதவர்களுக்கான அபராதம் ரூ.200 லிருந்து, ரூ.1000 ஆக உயர்வு: மும்பை மாநகராட்சி

மகாராஷ்ட்ராவில் பரவிய கொரோனாவைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அணியாதவர்களுக்கான அபராதத் தொகை ரூபாய் 200 லிருந்து ரூபாய் ஆயிரமாக 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த பத்து 12 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்றும் விதிகளை மீறுவோர் மீது கருணையே காட்டாமல் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சாஹார் தெரிவித்துள்ளார்.

திருமணம் போன்ற சடங்குகளிலும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் மணப்பெண் , மாப்பிள்ளை மீதும் வழக்குத் தொடரப்படும் என்றும் இக்பால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!