தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
ஸ்கின்னி ஜீன்ஸ் அணிந்து 42 கிலோமீட்டர் தூரம் மாரத்தானில் ஓடி, சாதனை படைத்த You Tuber ரியான் டிராஹான்..
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
-
யூடியூபர் ரியான் சமீபத்தில் ஒரு ஸ்கின்னி ஜீன்ஸ், அணிந்து மராத்தான் ஓடிய வீடியோவை அவரது யூடியூப் பேஜ் மற்றும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சில யூடியூபர்கள் அசாதாரண விஷயங்களை முயற்சிக்க விருப்பம் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் பார்வையாளர்களை கவர வித்தியாசமான சவால்களை மேற்கொள்கின்றனர்.
அத்தகைய ஒரு யூடியூப் நட்சத்திரம் தான் “ரியான் டிராஹான்”. இவரை 2.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். அவர் தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது சில சாகசங்களை செய்து அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் ரியான் சமீபத்தில் ஒரு ஸ்கின்னி ஜீன்ஸ், அணிந்து மராத்தான் ஓடிய வீடியோவை அவரது யூடியூப் பேஜ் மற்றும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் ரியான் ஸ்கின்னி ஜீன்ஸ் அணிந்து 26.2 மைல் (42.16 கிலோமீட்டர்) தூரம் ஓடியுள்ளார். 5 கி.மீட்டருக்கான நேர இலக்கு 24 நிமிடங்கள் 52 வினாடிகள் என நிர்ணயித்து கொண்ட நிலையில் ரியானால் அதை அடைய முடியவில்லை, ஸ்கின்னி ஜீன்ஸ் அணிந்திருந்ததால் அவரால் வேகமாக ஓட முடியவில்லை. முதல் முறையாக தோல்வியுற்றது ரியானுக்கு மிகவும் கடினமாக இருந்தது, இதனை தொடந்து அவர் சரியான நேரத்தில் 10 கி.மீ அடைய முடிந்தவரை வேகமாக ஓடினார். 10 கி.மீ கடந்த பின்னர் அவருக்கு எனர்ஜி பானம் வழங்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு 5 கிலோமீட்டருக்கும் மேலும் சங்கடமாக உணரத் தொடங்கினார். ஆனாலும் விடாமுயற்சியுடன் ஓடிக்கொண்டே இருந்தார். மாரத்தானின் போது ரியான் பல சவால்களை எதிர்கொண்டார். இந்த ஓட்ட பந்தயத்தை முடிக்க 4 மைல்கள் எஞ்சியிருந்த போது அவருக்கு பூரிட்டோ எனும் சப்பாத்தி ரோல் வழங்கப்பட்டது. மராத்தானின் முடிவில், ரியான் தரையில் மயங்கி விழுந்ததை அவர் ஷேர் செய்துள்ள வீடியோவில் காணலாம். இந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ ரியானைப் பின்தொடர்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏராளமானோர் இந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ் செய்துள்ளனர். ஒருவர், “இது மிகவும் மரியாதைக்குரியது" என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நபர், ரியானின் எடிட்டிங் மற்றும் திறமையை பாராட்டினார். ஒரு யூடியூபர், ரியான் நல்ல வேலை செய்துள்ளார் என்று கூறினார். ஸ்கின்னி ஜீன்ஸுடன் ரியான் ஓடுவதைப் பார்த்த ஜெர்மி ஜுட்கின்ஸ் என்ற நபர், எல்லாவற்றையும் விட ஜீன்ஸ் ஜோடி ஏற்படுத்தும் வலி தான் தாங்கமுடியாதது என கமெண்ட் செய்துள்ளார். ரியானின் பல ரசிகர்கள் அவர் 26 மைல் மராத்தான் ஓட்டத்தை பார்த்து ஈர்க்கப்பட்டனர்.
முன்னதாக, ரியான் உலகின் மிகச்சிறிய வீட்டில் 24 மணி நேரம் வசித்து சாதனை படைத்தார். அவர் கையகல வீட்டில், நடந்ததை தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்த நிலையில் அந்த வீடியோ வைரலானது. வெறும் 25 சதுர அடி பரப்பளவில், உருவாக்கப்பட்டிருந்த அந்த குட்டி வீட்டில், அடுப்பு, கழிப்பறை, மினி ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதுவரை அந்த வீடியோவை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோரு
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு எரிதல், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தவறான உணவுப் பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உணவு பழக்கங்களில் சில மாற்றுதல்கள் செய்வது நல்ல பலன தரும் என்கின்றனர் மருத்துவர்கள். அசிடிட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பது அசிடிட்டிக்கு முக்கிய காரணம். ஜீரணிக்க எதுவும் இல்லாத போது, வயிற்றின் அமிலம் வயிற்றின் உட்புறப் சுவர்களை தாக்கி அதனை மெலியச் செய்கிறது. மேலும் சாப்பிட்ட பிறகு தூங்கவோ, படுக்கவோ கூடாது. சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது,
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று(மார்ச் 31) வெளியாக உள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். எனினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா நோய் பரவல், மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். தேர்தல் முடிந்தபின் கட்டுப்பாடுக
Comments
Post a Comment