நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வயதானவர்கள் வேடமணிந்துவந்த இளம்பெண்கள்: போலீசில் சிக்கிய பரிதாபம்!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வயதானவர்கள் வேடமணிந்துவந்த இளம்பெண்கள்: போலீசில் சிக்கிய பரிதாபம்!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்காக இரு பெண்கள் நூதன மோசடியில் ஈடுபட்டனர்.

புளோரிடாவில், கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக இணையத்தில் விண்ணப்பித்த இரு பெண்கள், தங்கள் வயதை 65 எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வயதானவர்கள் போல் உடையணிந்து தடுப்பூசி மையத்திற்கு வந்தனர்.

அவர்களது அடையாள அட்டையை பரிசோதித்த போது பெண்களின் வயது 34 மற்றும் 44 என்பது தெரியவந்தது. இருபெண்களும் முதல் தடுப்பூசியையும் இதே டெக்னிக்கை பயன்படுத்தி போட்டுக்கொண்டது விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!