நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சீனாவைத் தொடர்ந்து அடுத்த வைரஸ் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ வாய்ப்பு இருப்பதாக தகவல்

சீனாவைத் தொடர்ந்து அடுத்த வைரஸ் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ வாய்ப்பு இருப்பதாக தகவல்

சீனாவின் வூகான் சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதைப் போல அடுத்த வைரஸ் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வூகான் சந்தையில் பல வன உயிரினங்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு உணவாக்கப்பட்டதால் கொரோனா பரவியதாகக் கூறப்படும் நிலையில், ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் அதுபோன்று ஒலுவு என்ற பெயரில் சந்தை செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

சீனாவைப் போலவே இங்கும் அலங்குகள், வவ்வால்கள், குரங்குகள் ஏராளமாகப் பிடிக்கப்பட்டு உயிருடன் இருக்கும் போதே கொதிநீரில் மூழ்கடிக்கப்பட்டு உணவாகப் பரிமாறப்படுகிறது. இதற்காக சில உயிரினங்கள் சித்ரவதை செய்யப்படும் வீடியோவும் வெளியாகி உள்ளது.

இதையடுத்து சில உயிரினங்கள் மீட்கப்பட்டாலும் மக்களின் அறியாமையால் திருட்டுத்தனமாக வனஉயிரின வியாபாரம் தொடர்கிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!