நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கீரி, முயல் இறைச்சி மூலம் கொரோனா பரவியதா? சீனாவில் ஆய்வு மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பு குழு சந்தேகம்?

கீரி, முயல் இறைச்சி மூலம் கொரோனா பரவியதா? சீனாவில் ஆய்வு மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பு குழு சந்தேகம்?

சீனாவில் ஊகான் நகரில் உள்ள இறைச்சி மார்க்கெட்டில் விற்கப்பட்ட, கீரி மற்றும் முயல் இறைச்சியில் இருந்து, கொரோனா பெருந்தொற்று, மனிதர்களுக்கு பரவியிருக்க கூடும் என, உலக சுகாதார அமைப்பு, தனது ஆய்வின் அடிப்படையில் சந்தேகிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை, அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி இதழான, தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal), செய்தியாக வெளியிட்டுள்ளது.

இருப்பினும், முயல் மற்றும் கீரி இறைச்சிகளை சப்ளை செய்யும் நிறுவனங்களின் முழுவிவரங்களை, உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழுவினரால் திரட்ட முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!