நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இரும்பு சத்து, நார்ச்சத்து நிறைந்த கருப்புகொண்டை கடலை ரொட்டி

இன்றைய காலகட்டத்தில் உடல் நலத்திற்கு ஊட்டமளிக்கும் உணவு வகைகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது அவசியமானது. அத்தகைய தன்மை கொண்ட கருப்பு கொண்டையை பயன்படுத்தி ரொட்டி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

கருப்புகொண்டைகடலை மாவு - 2 கப்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

தண்ணீரை லேசாக சுடவைத்து கருப்பு கொண்டைகடலை மாவில் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

ரொட்டி தயார் செய்யும் பதத்திற்கு வரவில்லை என்றால் சிறிதளவு கோதுமை மாவை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின்னர் மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும். இது சப்பாத்தியை விட சற்று கனமாக இருக்கும்.

ஆரோக்கிய பலன்:

இதில் இரும்பு சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடல் எடை கூடாது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருக்கும். சருமத்திற்கும் நல்லது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!