நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

விபரீத விளையாட்டில் குழந்தை... பதை பதைக்க செய்யும் நிமிடங்கள்! யாரு பார்த்த வேலைடா இது?

சிறிய குழந்தை ஒன்று ஏணியிலிருந்து வழக்கிக்கொண்டே கீழே இறங்கும் காட்சி பதை பதைக்க செய்கின்றது.




அந்த குழந்தை கீழே இறங்கியதும்.

ஒருவர் அந்த குழந்தையை வந்து கூட்டி செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 

மேலும் இந்த ஏணியின் பின்புறம் துணியை வைத்து குழந்தை ஏணியிலிருந்து தவறினாலும் கீழே விழாத வாறு பாதுகாப்பு செய்திருக்கிறார். 

ஆனால் பின்னால் உள்ள சுவரின் நிறமும், இந்த துணியின் நிறமும் ஒரே மாதிரியாக இருப்பதால் அது பலருக்கு தெரியவில்லை. வெறும் ஏணி மட்டுமே இருப்பது போல தெரிகிறது. 

இந்த வீடியோவும் குழந்தை மெதுவாக இறங்குவதை எடிட்செய்து வேகப்படுத்தி குழந்தை வழுக்கி கொண்டே இறங்குவது போல தயார் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்க்கும் போது பலருக்கு நெஞ்சம் பதறுகிறது.



ALSO READ : கனவு எதனால் உண்டாகிறது? புரிந்துகொள்வது எப்படி? புரியாத புதிரின் அர்த்தங்கள்;

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!