நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தண்ணீரை ஆசிட் போல் உணரும் வினோத பெண் - காரணம் என்ன?

 ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு கிளாஸ் தண்ணீர் கூட முழுதாக குடிக்க முடியாமல் தவிக்கும் அபிகாயில் மற்ற பானம் மாதுளை ஜூஸை பருகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.


நீரின்றி மனிதன் இல்லை என்பது போல வாழ்நாள் முழுவதும் நமது ஒவ்வொரு செயல்களிலும் கலந்துள்ள தண்ணீர் ஒருவருக்கு எதிரியாக உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த அபிகாயில் பெக் என்ற 15 வயது சிறுமிக்கு கடந்த மாதம் அக்வாஜெனிக் யூர்டிகேரியா என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த நோயின் அறிகுறிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவர் 13 வயதாகும் போது முதலில் தென்பட்டுள்ளது. அதாவது 200 மில்லியன் மக்களில் ஒருவரை தாக்கும் இந்த நோய்க்கான பாதிப்பில் ஒன்று தண்ணீர் அலர்ஜி.

மழை அல்லது தண்ணீர் மேலே பட்டாலே அமிலம் பட்டது போல தான் உணர்வதாக அபிகாயில் பெக் கூறியுள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு கிளாஸ் தண்ணீர் கூட முழுதாக குடிக்க முடியாமல் தவிக்கும் அபிகாயில் மற்ற பானம் மாதுளை ஜூஸை பருகி வருவதாகத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரது சொந்த கண்ணீரே தோலில் பட்டால் முகம் சிவந்து விடுமாம்.

இப்படி எல்லாம் நடக்குமா என மற்றவர்கள் கேலியாக கேட்டு விடுவார்களோ என்ற பயத்தில் மருத்துவரை கடந்த 2 ஆண்டுகளாக சந்திக்காமல் இருந்துள்ளார். பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் தண்ணீரில் உள்ள ஒரு பொருளின் காரணமாக இந்த நிலை ஏற்படலாம் என்று நம்பப்படும் நிலையில், தற்போது மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளி உலகில் தனக்கிருக்கும் பாதிப்பு குறித்துத் தெரிவித்துள்ளதாக அபிகாயில் பெக் கூறியுள்ளார்.

இந்த நோயினால் ஏற்படும் தண்ணீர் ஒவ்வாமையால் இதுவரை 100க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!