நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

 பொதுவாக மனதை ஒருமுகப்படுத்தி பல சாதனைகளை புரிய உதவுகிறது தியானம்.

தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் தியானம் செய்தாலே உடல் ,மனம், மூளை ஆரோக்கியம் பெறும்.

அதுமட்டுமின்றி உடலுக்கு பல வகையில் ஆரோக்கியம் அளிக்கின்றது. அந்தவகையில் தியானம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.


தியான நிலை ஆழமாக இருக்கும்போது, ​​ தியானம் முடிந்த பின்னரும் தியானத்தின் விளைவு சில நிமிடங்களுக்கு தொடர்கிறது.  

உடல் நிதானமாக இருந்தாலும் மனம் எச்சரிக்கையாக இருக்கிறது. இது முழுமையான ஓய்வு அளிக்கிறது

தியானம் ஒருவரின் உள்ளுணர்வுத் திறனை அதிகரிக்கிறது.

உடலில் ஆக்ஸிஜன் நுகர்வு வீதம் குறைகிறது. ஆகையால், உடலியல் ரீதியாக ஒருவர் ஆறு அல்லது எட்டு மணிநேர தூக்கத்திலிருந்து பெறுவதை விட அந்த சில தியான நிமிஷங்களில் ஆழமாக ஓய்வு பெறுகிறார். இருப்பினும், தியானம் தூக்கத்திற்கு மாற்றானது அல்ல.

சீரான வழக்கமாக மேற்கொள்ளும் தியானம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மனம் எச்சரிக்கையாக இருக்கிறது, புத்தி கூர்மையாகிறது.

நல்ல ஆரோக்கியமும் நிதானமான மனமும் இயல்பாகவே உற்சாகத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கும்.   



ALSO READ : 1 கப் பிளாக் டீயில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!