நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

1 கப் பிளாக் டீயில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

 மக்களால் மிகவும் விரும்பி அருந்தும் பானமாக ப்ளாக் டீ இருக்கிறது.இது மற்ற தேயிலைகளை விட சிறந்ததாக கருதப்படுகிறது.


பிளாக் டீயானது எளிதான தேநீர் மட்டுமல்லாது இது நமக்கு ஏகப்பட்ட நன்மைகளை தருகிறது.

ப்ளவனாய்டுகள், டானின்கள் மற்றும் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளது. இந்த பிளாக் டீயை உங்க எடை இழப்பிற்கு கூட பயன்படுத்தி வரலாம். 

அந்தவகையில் பிளாக் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். 


பிளாக் டீ குடிப்பது உடல் எடை குறைப்பில் முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது, இதனை தினசரி குடிப்பதன் மூலம் செரிமான மண்டலம் நன்கு செயல்பட துவங்குகிறது.


  பிளாக் டீயில் உள்ள மூலக்கூறுகள் நமது சிறு குடலில் நீண்ட நேரம் தங்கியிருந்து நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உற்பத்தி செய்கிறது. 

  

1 கப் பிளாக் டீயில் 47 மிலி கேஃபைன் உள்ளது, இந்த கேஃபைன் உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. இதன் காரணமாக உடலில் தேவையற்ற கொழுப்புகள் படிவது தடுக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.


 தினமும் பிளாக் டீ அருந்துபவர்களில் டைப்-2 நீரிழிவு நோயுக்கான அபாயம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றது.


  பிளாக் டீயிலுள்ள நன்மைபயக்கும் மூலக்கூறுகள் தோல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் வயிற்று புற்றுநோய் போன்ற பல்வேறு புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது.


பிளாக் டீ அருந்துவதால் கொழுப்புகளின் அளவு கட்டுக்குள் இருந்து ரத்த ஓட்டம் சீராகி இதயம் ஆரோக்கியமாக செயல்படுகிறது. 


பிளாக் டீ குடிப்பதால் மன அழுத்தம் நீங்கி ஒருவித புத்துணர்ச்சி கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.


பிளாக் டீ குடிப்பதால் செரிமான மண்டலம் சிறப்பாக இயங்குகிறது, கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது, எலும்புகள் வலுவாக்கப்படுகிறது மற்றும் வாயில் எவ்வித தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்குகின்றது. 



ALSO READ : வீட்டிலேயே ரோட்டுக்கடை காளான் செய்ய தெரியுமா..? டிரை பண்ணி பாருங்க... ரெசிபி இதோ...

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!