நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இரவில் ஊறவைத்து காலையில் இதை சாப்பிடுங்கள்: நோய்கள் எல்லாம் ஓடியே போகும்!!

 Sprouts Health Benefits:அனைத்து வகையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டையும் நாம் சரிசெய்ய விரும்பினால், ஊறவைத்த சோயாபீன், பயறு போன்றவற்றை தினமும் சாப்பிட வேண்டும். 


  • முளை கட்டிய தானியங்களில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகின்றன.
  • நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் செரிமானத்திற்கு நன்மை பயக்கும்.
  • இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

முளை கட்டிய தானியங்களின் ஆரோக்கிய நன்மைகள்:

ஊறவைத்த தானியங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை தினமும் உட்கொண்டால், நீங்கள் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். முளைத்த பொருட்கள் மிகவும் ஆரோக்கியமானவை. அனைத்து வகையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டையும் நாம் சரிசெய்ய விரும்பினால், ஊறவைத்த சோயாபீன், பயறு போன்றவற்றை தினமும் சாப்பிட வேண்டும். இவற்றில் அனைத்து வைட்டமின்களும் காணப்படுகின்றன. 

பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் முளை கட்டிய தானியங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் குறைபாடு பூர்த்தியாகும். முளை கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்

முளை கட்டிய தானியங்களை தினமும் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம் அதிகரிக்கும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இத்தகைய தானியங்களை உண்பதால் நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தி அதிகரிக்கிறது. அடிக்கடி வானிலை மாறுவதால் நோய்வாய்ப்படும் அபாயம் அதிகமாக இருக்கும். இவற்றை சாப்பிடுவதால் அந்த அபாயம் குறையும். 

தசைகள் வலுவாக இருக்கும்

சோயாபீன் மற்றும் பச்சை பயறுகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நல்ல அளவில் காணப்படுகின்றன. அவற்றில் மக்னீசியமும் காணப்படுகிறது. முளைத்த தானியங்களை தினமும் சாப்பிடுவதால், தசைகள் வலுவடையும், அவற்றில் வலியால் வரும் பிரச்சனை இருக்காது.

செரிமானத்தை மேம்படுத்தும்

முளை கட்டிய தானியங்களில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகின்றன. நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் செரிமானத்திற்கு நன்மை பயக்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. 

தோலுக்கு நன்மை பயக்கும்

முளை கட்டிய சோயாபீன், நிலவேம்பு ஆகியவற்றை சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த ஆரோக்கியமான முளைகளை சாப்பிடுவதன் மூலம், முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் சுருக்கங்கள் நீங்கும். ஊறவைத்த தானியங்களின் ஆண்டிஆக்சிடெண்டுகள் சருமத்தில் உள்ள செல்களை மேம்படுத்துகின்றன.

எடை இழப்புக்கு உதவும்

முளைத்த தானியங்களை காலை உணவாக சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த முளைகளை உண்பதால் அதிக சக்தி கிடைப்பதுடன் நீண்ட நேரம் பசி எடுக்காது. குறைந்த கொழுப்புள்ள உணவை உட்கொள்வதால் எடை குறையும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!