நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வீட்டிலேயே ரோட்டுக்கடை காளான் செய்ய தெரியுமா..? டிரை பண்ணி பாருங்க... ரெசிபி இதோ...

 வீட்டில் அனைவருக்கும் பிடித்த இந்த காளானை நீங்களே சமைத்து கொடுத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்.


ரோட்டுக்கடை காளானை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனாலும் சிலருக்கு அது சுத்தமாக இருக்குமா என்ற சந்தேகம் இருக்கலாம். அதேசமயம் வீட்டில் அனைவருக்கும் பிடித்த இந்த காளானை நீங்களே சமைத்து கொடுத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம். எனவே உங்களுக்கான ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள் :

முட்டைக்கோஸ் - 2 கப்

காளான் - 2 கப்

மைதா - 1 கப்

சோள மாவு - 1/4 கப்

மிளகாய் தூள் - 1 table spoon

கரம் மசாலா - table spoon

உப்பு - தே. அளவு

எண்ணெய்- வறுக்க

வதக்க :

வெங்காயம் - 3

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

தக்காளி - 2

மஞ்சள் - 1 tsp

மிளகாய் தூள் - 2 tsp

கரம் மசாலா - 1 tsp

தனியா தூள் - 1 tsp

உப்பு - சிறிதளவு

சோளமாவு - 1 tsp


செய்முறை :

முதலில் காளான், கோஸ் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும் அதில் மைதா, சோளமாவு, மிளகாய் தூள் என மிக்ஸிங் செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸ் செய்து 5 நிமிடம் ஊற வைக்கவும்.

பின் எண்ணெய் காய வைத்து அதில் இந்த மிக்ஸிங்கை பக்கோடா போல் வறுத்து எடுக்கவும். பின் கடாய் வைத்து அதில் வதக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.

தக்காளி அரைத்து போட வேண்டும். சோள மாவை ஒரு கப் தண்ணீரில் கலந்து ஊற்றவும்.

மசாலா நன்கு மிக்ஸானதும் வறுத்து வைத்துள்ள காளானை போட்டு பிரட்டவும். வறுத்த காளான் மிக்ஸிங்கை முழுதாக போடாமல் உடைத்து போடவும்.

அவ்வளவுதான் காளான் ரெடி.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!