நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பச்சரிசியில் மொறு மொறு நெய்யப்பம் சுடுவது எப்படி தெரியுமா?

 பச்சரிசியில் மொறு மொறு நெய்யப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். 



பொருட்கள்

  1. பச்சரிசி - 1 ஆழாக்கு
  2. பொடித்த வெல்லம் - 3/4 ஆழாக்கு
  3. தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
  4. ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

பச்சரிசியில் மொறு மொறு நெய்யப்பம் சுடுவது எப்படி தெரியுமா? | Nei Appam Ghee Appam

செய்முறை

அரிசியை குறைந்தது 2 மணிநேரம் ஊறவிட்டு நன்கு கழுவி அதனுடன் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த விழுதில் தேங்காய் துருவல்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் நெய்யை சற்று தாராளமாக ஊற்றி காய்ந்ததும் (புகை வரக்கூடாது) அதில் வெல்லமாவைச்சேர்த்து வேக விடவும்.

ஒருபுறத்தில் நன்கு வெந்தவுடன் கம்பியால் குத்தி அடுத்த பக்கமாக நெய் அப்பத்தை திருப்பவும்.

பொன்னிறமான நெய்யப்பம் நைவேத்தியத்திற்கு ரெடி.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!