நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முட்டையோட்டை கொண்டு இரண்டே நாட்களில் வெள்ளையாக முடியுமா? இது உங்களுக்கான டிப்ஸ்!

 முட்டையோட்டினை கொண்டு எம்மை அழகுபடுத்திக் கொள்ளலாம் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், முட்டையோட்டில் காணப்படும் மெல்லிய ஜெல் போன்ற பதார்த்தம் எம்மை பல மடங்கு அழகுபடுத்துகிறது.

அந்த வகையில் முட்டையோடு எவ்வாறு அழகு சாதன பொருளாக பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.


தேவையான பொருட்கள்


முட்டையோடு


எலுமிச்சைச்சாறு


முட்டை வெள்ளைக்கரு


தேன்

செய்முறை

முட்டை ஓடுகளை நன்கு மிக்சியில் பொட்டு பொடியாக்கிக் கொள்ளுங்கள். இந்த பொடியை காற்று உட்செல்லாத வகையில் பராமரிப்பது அவசியம்.

பின்பு முட்டையோட்டு பொடியுடன் முட்டையின் வெள்ளைகருவை சேர்த்து ஒரு கலவையாக கலந்து கொள்ளுங்கள்.

அது ஒரு புறம் இருக்க, மீண்டும் ஒரு கோப்பையில் முட்டையோட்டு பொடி, எலுமிச்சைசாறு, தேன் ஆகிய மூன்றையும் பசைபோல் கலந்துக்கொள்ளுங்கள்.

பாவணை முறை

முகத்தை நன்கு குளிர்ந்த நீரில் கழுவிக்கொள்ளுங்கள். அதன் பின்பு முட்டையோட்டு பொடியுடன் முட்டையின் வெள்ளைச்கரு கலந்த கலவையை நன்கு முகத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

இதனை 5 நமிடங்கள் நன்றாக இயற்கை காற்றில் உலர விட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவிக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதனால் முகத்திலுள்ள தேவையற்ற கருமை நீங்கும்.

இதனை தொடர்ந்து முட்டையோட்டு பசையை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவிக்கொள்ளுங்கள், இவ்வாறு செய்வதனால் சருமத்தில் உள்ள துளைகள் சுத்தப்படுத்தப்படும்.

இந்த கலவையை இரண்டு நாட்கள் செய்து வந்தால் வெயிலினால் ஏற்படும் கருமை மற்றும் மாசுக்கள் நீங்கி முகம் பொழிவு பெறும்.



ALSO READ : அக்குள் கருமையை போக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!