நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சிரிக்க மட்டுமே..!!

சிரிக்க மட்டுமே..!!



கணவன் : உன் பெயர் என்ன.?
மனைவி : என்ன, தெரியாத மாதிரி கேட்கறீங்க?
கணவன் : பரவால சொல்லு..
மனைவி : தங்கம்.....ஏன்?
கணவன் : இனி என்னால உன்ன என் கூட வச்சுக்க முடியாது...
மனைவி : ஏங்க திடீர்னு இப்படி சொல்றீங்க..?
கணவன் : கவர்மென்ட் அரை கிலோ தங்கம் வச்சுக்கத்தான் பர்மிஷன் கொடுத்து இருக்காங்க.... நீ 68 கிலோ இருக்கயே..
மனைவி : ஆமாங்க நானும் உங்கள என் கூட இனி வச்சுக்க முடியாது போல
கணவன் : என்னடி ஒடம்பு எப்புடி இருக்கு.....?
மனைவி : ஆமாங்க, உங்க பெயரு மணி! அதுவும் கருப்பா வேற இருக்கீங்க... கவர்மென்ட் தான் black money இருந்தா புடிச்சு குடுக்க சொல்லிருக்காங்களே, என்ன புடுச்சி குடுத்தரலாமா????
கணவன் : !!!!!!!!!!
மனைவி : யார்கிட்ட...??

மாப்பிள்ளை வீட்டார் : பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார் : பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
மாப்பிள்ளை வீட்டார் : ???

வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...

(சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.)

வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?

மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்.

வா‌த்‌‌தியா‌ர் : ????

பொன்மொழிகள்..!!

👍 நாம் வாழும் போது யாரை சிரிக்க வைக்கிறோமோ
அவர்கள் தான் நாம் இறக்கும்போது அழுகிறார்கள்..

👍 நாம் வாழும் போது யாரை அழுக வைக்கிறோமோ
அவர்கள் தான் நாம் இறக்கும்போது சிரிக்கிறார்கள்.. 

👍 உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை..!!

சிந்திக்க வைக்கும் வரிகள்..!!

👌 ஒரு கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் எல்லாம் சேர்ந்து இறைவனை வேண்டினார்கள், அதில் ஒருவன் மட்டும் குடை எடுத்து வந்தான். அதற்கு பெயர் தான் Faith..

👌 குழந்தையை மேலே தூக்கி போட்டு விளையாடினார் ஒரு தந்தை ஆனால் அதற்கு பயப்படாமல் அவனைப் பார்த்து குழந்தை சிரித்தது, அதற்கு பெயர் தான் Trust..

👌 ஒவ்வொரு நாளும் அலாரம் வைத்துவிட்டு படுக்க போகிறோம் நாம் நாளை உயிரோடு இருப்போமா? என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லாமல் இருக்கிறோம் அதற்கு பெயர் தான் Hope..

👌 நடப்பது எதுவும் நம் கையில் இல்லை என்று தெரிந்தும் எதிர்காலத் திட்டம் போடுகிறோம், அதற்கு பெயர்தான் Confidence..

👌 உலகமே கஷ்டப்படுவதை நாம் தினமும் பார்த்து வந்தும் அது போல நமக்கும் கஷ்டம் ஏற்படும் என்று அறிந்த போதிலும் நாம் திருமணம் செய்து கொள்கிறோம் அல்லவா? அதற்கு பெயர் தான் Over confidence...

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!