நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

துவரம் பருப்பு தோசை .....

 துவரம் பருப்பில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது.


தேவையான பொருட்கள் : 


புழுங்கலரிசி - 1 கப்,

 துவரம்பருப்பு - அரை கப், 

உப்பு - தேவையான அளவு,

 காய்ந்த மிளகாய் - 6,

 தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,

 எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: 

அரிசி, பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக ஊறவைத்து உப்பு, காய்ந்த சேர்த்து அரைத்து கொள்ளவும். 

அரைத்த மாவில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து 2 மணி நேரம் அப்படியே வைக்கவும். 

பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

 இப்போது சூப்பரான துவரம் பருப்பு தோசை ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள குருமா சுவை கொடுக்கும்.



ALSO READ : புரதம், இரும்புச்சத்து நிறைந்த கம்பு லட்டு ......



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!