நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

செனாப் ரயில் பாலம்: உலகிலேயே உயரமான ரயில்வே பாலத்தின் கண்கவரும் புகைப்படங்கள்!

 உத்தம்பூர் , ஶ்ரீ நகர் , பரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் கீழ் 1486 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. செனாப் ரயில் பாலம் மணிக்கு 266 கிமீ வேகத்தை தாங்க வல்லதாகவும் உள்ளது.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பங்கால் மற்றும் கவுரி என்ற பகுதிகளை இணைக்கும் விதமாக பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பாலம் தான் உலகிலேயே உயரமான ரயில்வே பாலம் என்று கருதப்படுகிறது.


இதன் உயரம் 359 மீட்டர், நீளம் 467 மீட்டர். இந்த பாலம் காஷ்மீரின் ஸ்ரீநகரை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கிறது. இந்த பாலம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் உள்ள ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


இது நில அதிர்வுகளில் ரிக்டர் அளவுகோலில் 8 வரை தாங்க வல்லது. வடக்கு ரயில்வே துறையின் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுவதாக தலைவர்கள் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். உத்தம்பூர் , ஶ்ரீ நகர் , பரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் கீழ் 1486 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. செனாப் ரயில் பாலம் மணிக்கு 266 கிமீ வேகத்தை தாங்க வல்லதாகவும் உள்ளது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!