நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Smartphone-ஐ இரவில் சுவிட்ச் ஆப் செய்து வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஆச்சரிய தகவல்...

 பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 24 மணிநேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் இயங்குகிறது.

உங்கள் ஸ்மார்ட்போனை அவ்வபோதோ அல்லது இரவு நேரத்திலோ சுவிட்ச் ஆப் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

செல்போனை இரவிலோ அல்லது ஒருமுறையாவது சுவிட்ச் ஆப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.

கதிர்வீச்சை கட்டுப்படுத்தும்

ஸ்மார்ட்போன்களை நாம் இயக்காமல் வைத்திருந்தால் கூட அதில் இருந்து கதிர்வீச்சுகள் வெளியாகிறது. கதிர்வீச்சின் அளவு மற்றும் அதன் விளைவுகள் மிகவும் சர்ச்சைக்குரியவை. வல்லுநர்கள் கதிர்வீச்சு அளவை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க அறிவுறுத்துகிறார்கள். இதை செய்வது மிக எளிது, அதாவது இரவு நேரத்தில் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டால் போதும். இப்படி செய்வது கதிர்வீச்சு வெளியாவது கட்டுப்படும்.

சார்ஜிங்

சார்ஜ் செய்யும் போது குறைந்தபட்சம் உங்கள் தொலைபேசியை அணைக்கலாம். சார்ஜ் ஆகும் நேரத்தில் எப்படியும் அழைப்புகளைச் எடுக்கவோ அல்லது குறுஞ்செய்திகளை அனுப்பவோ நாம் போனை பயன்படுத்த மாட்டோம். இரண்டாவதாக, உங்கள் மொபைலை அணைப்பது உங்கள் தொலைபேசியின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய உதவுகிறது. நிபுணர்கள் கருத்துப்படி, போன் அணைக்கப்படும் போது பேட்டரி மிகவும் சீராக சார்ஜ் செய்கிறது, இது பேட்டரி ஆயுளுக்கும் பயனளிக்கிறது.


சுற்றுச்சூழலுக்கு சிறந்தது

ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிக்கும் போது அதிக அளவிலான ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது போன்களில் உள்ள சிப், போர்ட் போன்றவை தயாரிக்கும் போது அதிக அளவிலான ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. நாம் அவ்வபோது செல்போனை சுவிட்ச் ஆப் செய்தால் சுற்றுச்சூழல் பாதிப்பை சிறிதேனும் தடுக்கலாம்.  

மன அழுத்தம் குறையும்

நாள் முழுவதும் எல்லா நேரங்களிலும் செல்போனை நான் இயக்கி கொண்டிருக்க வேண்டுமா என்ன? உங்கள் தொலைபேசியில் அதிக நேரத்தைச் செலவிடுவது மனச்சோர்வு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கான ஆதாரங்கள் நீண்ட காலமாக வளர்ந்து வருகின்றன. ஆகவே குறைந்தபட்சம் இரவிலாவது ஸ்மார்ட்போனை அணைத்து வைக்க வேண்டும். 

செல்போன் வேகம்

தொடர்ச்சியாக செல்போன்களை பயன்படுத்துவதால் அதன் வேகம் குறைவதோடு குறைந்த நம்பகத்தன்மை கொண்டதாக மாறும். எனவே உங்கள் மொபைலை அடிக்கடி ஆஃப் செய்தால் அது மென்மையாக இயங்கும் மற்றும் பயன்பாடுகள் சிறப்பாக செயல்படும்.



also read : செல்போனை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? இந்த தவறை தான் தினம் செய்றீங்க...

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!