நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

“என்ன வித்தயா காட்டுறீங்க“.? வெயிட்டர் இப்படித்தான் டஜன் கணக்கில் தட்டுக்களை சுமந்து செல்ல வேண்டுமோ.? வைரல் வீடியோ

 Viral Video | ஹோட்டலில் பணிபுரிந்த வெயிட்டர் ஒருவர், ஒரு பெரிய தட்டில் 10க்கும் மேற்பட்ட தட்டுகளை அடுக்கி வைத்து தோலில் சுமந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகிறது. இப்படி பணிசெய்யும் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டும் என்பதோடு இதெல்லாம் தேவையில்லாத வேலை என நெட்டிசன்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.


இன்றைக்கு உள்ள பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்காக வாரத்தின் 6 நாள்களும் அயராது உழைப்பார்கள். ஒருநாள் விடுமுறை என்றாலும் குடும்பத்தோடு சுற்றுலா செல்வது முதல் அந்நாள் முழுவதும் 3 வேளையும் ஹோட்டலில் சாப்பிடுவார்கள். இதோடு திருமண நாள், பிறந்த நாள், என அனைத்து விசேஷங்களுக்கு ட்ரீட் கொடுக்கும் நண்பர்களும் ஹோட்டலுக்குத் தான் அழைத்து சென்றுவிடுவார்கள். விதவிதமான டிஸ்களோடு வாடிக்கையாளர்களுக்கு விருந்தை வழங்கினாலும் வாடிக்கையாளர்களின் சேவையை முறையாக செய்யவில்லை என்றால் அத்தனையும் வீணாகிவிடும்.

பொதுவாக உணவகங்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் சேவை என்பது முக்கியமான ஒன்று. ஹோட்டலில் பணியாற்றும் வெயிட்டர் கொஞ்சம் வேலையில் கவனக்குறைவோடு இருந்தாலும் முழு வணிகத்தையும் பாதிக்க நேரிடும். இந்த சூழலில் தான் பல உணவக உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இரவு நேர ஹோட்டல் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக வண்ணமயமான விளக்குகள், பலூன்களைக் கட்டி வைத்து அலங்கரிப்பார்கள். இதோடு ஹோட்டலில் பணிபுரியும் வெயிட்டர்களும் வாடிக்கையாளர்களை தங்கள் வசம் கொண்டு வருவதற்காக பணிகளை மேற்கொள்கிறார்கள்.

இது போன்ற சூழலில், ஹோட்டலில் பணியாற்றிய வெயிட்டர் ஒருவர் செய்த பணி சோசியல் மீடியா பயனர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன செய்தார் தெரியுமா? “ஹோட்டலில் சமைக்கும் அறையில் வாடிக்கையாளர்கள் என்னென்ன உணவு பொருள்களைக் கேட்டார்களோ? அதையெல்லாம் தனித்தனி ப்ளேட்டில் வைக்கிறார். பின்னர் ஒரு பெரிய தட்டில் ஒவ்வொரு ப்ளேட்டையும் அழகாக அடுக்கி வைத்துக் கொள்கிறார். சுமார் 10 தட்டுக்களுக்கும் மேல் அடுக்கி வைப்பதோடு அதனை லாவகமாக தன்னுடைய தோளில் வைத்து சுமந்து செல்கிறார்.

அப்போது வாடிக்கையாளர்கள் சாப்பிடும் இடம் வருகிறது. இப்போது இறக்கி வைத்து விடுவாரோ? என்ற நினைப்பில் இருந்தால் மீண்டும் நடந்து செல்வது போன்று வீடியோ அமைகிறது. வெயிட்டர் தனது தோள்பட்டைக்கு மேல் பெரிய தட்டில் உணவை சுமந்து செல்வதோடு மற்றொரு கையில் டேபிளையும் உடன் எடுத்துச் செல்கிறார். சுமார் 1.13 நிமிட வீடியோ தான் என்றாலும் வெயிட்டர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் “என்ன வித்தயா காட்டுறீங்க“? எனவும் ஒவ்வொரு தட்டுகளாக எடுத்துச்சென்றால் விரைவில் முடித்துவிடுவீர்களே? அதுக்கு ஏன்? இப்படி செய்றீங்க? எனவும் கமெண்ட்டுகளைப் பதிவிட்டுவருகின்றனர். மேலும் சில இணையவாசிகள், தன்னுடைய திறமையை வெளிக்காட்டி பணிபுரியும் ஊழியர்களால் நிச்சயம் உணவகங்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதால், இவருக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டலில் பணியாற்றிய வெயிட்டரின் அசாத்திய திறமையை இதுவரை ஏறக்குறைய நான்கு மில்லியன் மக்கள் பார்த்துரசித்துள்ளனர். மேலும் இணையத்தில் தற்போதும் டிரெண்டாகிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!