நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நாகப்பாம்பின் தலையை வெட்டி நாகமணியை எடுத்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ...

 King Cobra Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் கண்களையே உங்களால் நம்ப முடியாது. வீடியோவை பார்த்து மனம் பதபதைப்பதையும் தவிர்க்க முடியாது.


  • சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது.
  • இதில் ஒரு நபர் நாகப்பாம்பின் தலையில் இருந்து நாகமணியை வெளியே எடுப்பதை காண முடிகின்றது.
  • சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது..

வைரல் வீடியோ: நாகமணி!! இந்தப் பெயரை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம்.  நாகப்பாம்பின் தலையில் ரத்தினம் இருப்பதாகவும், அதற்கு 'நாகமணி' என்று பெயர் என்றும் நமது பெரியோர்கள் கூறியுள்ளனர். நாகமணி தொடர்பான பல கதைகளை புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். ஆனால் உண்மை என்ன என்பது இன்னும் பெரிய மர்மமாகவே உள்ளது. சிலர் நாகமணி இருப்பதாக நம்புகிறார்கள், பலரோ நாகமணி என்று ஒன்று இல்லை என்றே கூறுகிறார்கள். 

ஆனால், இந்த சந்தேகத்துக்கு பதிலளிக்கும் வகையில்,  சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபர் நாகப்பாம்பின் தலையில் இருந்து நாகமணியை வெளியே எடுப்பதை காண முடிகின்றது. இது உண்மையில் நாகமணிதானா என்பது தெரியவில்லை. எனினும், சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வயல்களுக்கு இடையே உள்ள மண் சாலையில் நாகப்பாம்பு ஒன்று இருப்பதை வீடியோவின் துவக்கத்தில் காண்கிறோம். அதன் அருகில் ஒரு துணியுடன் நிற்கும் ஒரு நபர் அதை கட்டுப்படுத்த முயல்கிறார். அந்த நபர் முன்னோக்கி நடந்தால், பாம்பு தனது உடலை வளைத்து பின்னோக்கி செல்கிறது. பாம்பு சாலையைக்கடந்து வயல்களுக்குள் செல்ல முயலும் போது அவர் அந்த பாம்பை பிடிக்க முயல்கிறார். பல முறை அவர் அதை பிடித்த போதிலும், பாம்பும் ஒவ்வொரு முறையும் அவர் பிடியிலிருந்து நழுவி விடுகிறது. இதற்கிடையில் பாம்பு அவரை கடிக்கவும் முயற்சிக்கிறது. ஆனால், அந்த நபர் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொள்கிறார்.

இறுதியாக, அவர் ஒரு வழியாக, பாம்பை பிடித்து விடுகிறார். பாம்பை பிடித்த அந்த நபர் அதன் தலையை கத்தியலால் வெட்டுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. தலையின் ஒரு பகுதியை கத்தியால் கிழிக்கும் நபர் அங்கிருந்து சிறிய ரத்தினம் போன்ற ஒன்றை வெளியே எடுக்கிறார். பின்னர் அவர் அந்த பாம்பை கையில் பற்றிக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. நாகமணியை எடுத்த பின்னர் அந்த பாம்பை அந்த நபர் வயல்களில் விட்டுவிட்டார் என இந்த வீடியோ பற்றி கூறப்பட்டாலும், அந்த காட்சிகளை வீடியோவில் காண முடியவில்லை.  

நாகப்பாம்பின் தலையிலிருந்து நாகமணி எடுக்கப்படும் அரிய வீடியோவை இங்கே காணலாம்:


இந்த வீடியோ பழைய வீடியோ என்று கூறப்படுகின்றது. எனினும், இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீடியோவில் காணப்படும் கல் உண்மையிலேயே நாகமணிதானா என்ற கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்த வீடியோ 11,165,908 வியூஸ்களைப் பெற்றுள்ளது. 

பலர் இந்த வீடியோவை ஆர்வத்துடன் பார்த்தாலும், ஒரு விலை உயர்ந்த கல்லுக்காக ஒரு உயிரினத்தை இப்படி வதைப்பது எந்த விதத்தில் நியாயம் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். வாயில்லா ஜீவன்களை மனிதர்கள் தங்கள் சுயநலத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் பயன்படுத்தும் பழக்கம் எப்போது முடிவடையும் என்ற கவலையையும் பலர் வெளிப்படுத்தியுள்ளனர். பல வித விமர்சனங்கள் இந்த வீடியோவுக்கு வந்த வண்ணம் உள்ளன.

நாகமணி: கற்பனையா / உண்மையா?

வராஹ மிஹிரு எழுதிய பிருஹத்சம்ஹிதையின்படி, நாகமணி ஒரு கற்பனைக் கதை அல்ல. இது பாம்பின் தலையில் இருக்கும் விலைமதிப்புமிக்க புனிதமான கல்லாக கருதப்படுகிறது. நாகப்பாம்புகள் மிகவும் அரிதானவை. நாகமணியுடன் கூடிய பாம்பு மிகவும் பிரகாசமாக இருக்கும் என்று வராஹ மிஹிரு கூறுகிறார். அந்தப் பாம்பிலிருந்து வெளிப்படும் ஒளி நெருப்பு போன்ற ஒளியைக் கொடுக்கிறது. நாகமணியை தாங்கியிருக்கும் நாகப்பாம்புகள் இருக்கும் பகுதி முழுவதும் பிரகாசமாக காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!