தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
நாகப்பாம்பின் தலையை வெட்டி நாகமணியை எடுத்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ...
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
-
King Cobra Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் கண்களையே உங்களால் நம்ப முடியாது. வீடியோவை பார்த்து மனம் பதபதைப்பதையும் தவிர்க்க முடியாது.
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது.
இதில் ஒரு நபர் நாகப்பாம்பின் தலையில் இருந்து நாகமணியை வெளியே எடுப்பதை காண முடிகின்றது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது..
வைரல் வீடியோ: நாகமணி!! இந்தப் பெயரை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். நாகப்பாம்பின் தலையில் ரத்தினம் இருப்பதாகவும், அதற்கு 'நாகமணி' என்று பெயர் என்றும் நமது பெரியோர்கள் கூறியுள்ளனர். நாகமணி தொடர்பான பல கதைகளை புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். ஆனால் உண்மை என்ன என்பது இன்னும் பெரிய மர்மமாகவே உள்ளது. சிலர் நாகமணி இருப்பதாக நம்புகிறார்கள், பலரோ நாகமணி என்று ஒன்று இல்லை என்றே கூறுகிறார்கள்.
ஆனால், இந்த சந்தேகத்துக்கு பதிலளிக்கும் வகையில், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபர் நாகப்பாம்பின் தலையில் இருந்து நாகமணியை வெளியே எடுப்பதை காண முடிகின்றது. இது உண்மையில் நாகமணிதானா என்பது தெரியவில்லை. எனினும், சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வயல்களுக்கு இடையே உள்ள மண் சாலையில் நாகப்பாம்பு ஒன்று இருப்பதை வீடியோவின் துவக்கத்தில் காண்கிறோம். அதன் அருகில் ஒரு துணியுடன் நிற்கும் ஒரு நபர் அதை கட்டுப்படுத்த முயல்கிறார். அந்த நபர் முன்னோக்கி நடந்தால், பாம்பு தனது உடலை வளைத்து பின்னோக்கி செல்கிறது. பாம்பு சாலையைக்கடந்து வயல்களுக்குள் செல்ல முயலும் போது அவர் அந்த பாம்பை பிடிக்க முயல்கிறார். பல முறை அவர் அதை பிடித்த போதிலும், பாம்பும் ஒவ்வொரு முறையும் அவர் பிடியிலிருந்து நழுவி விடுகிறது. இதற்கிடையில் பாம்பு அவரை கடிக்கவும் முயற்சிக்கிறது. ஆனால், அந்த நபர் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொள்கிறார்.
இறுதியாக, அவர் ஒரு வழியாக, பாம்பை பிடித்து விடுகிறார். பாம்பை பிடித்த அந்த நபர் அதன் தலையை கத்தியலால் வெட்டுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. தலையின் ஒரு பகுதியை கத்தியால் கிழிக்கும் நபர் அங்கிருந்து சிறிய ரத்தினம் போன்ற ஒன்றை வெளியே எடுக்கிறார். பின்னர் அவர் அந்த பாம்பை கையில் பற்றிக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. நாகமணியை எடுத்த பின்னர் அந்த பாம்பை அந்த நபர் வயல்களில் விட்டுவிட்டார் என இந்த வீடியோ பற்றி கூறப்பட்டாலும், அந்த காட்சிகளை வீடியோவில் காண முடியவில்லை.
நாகப்பாம்பின் தலையிலிருந்து நாகமணி எடுக்கப்படும் அரிய வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ பழைய வீடியோ என்று கூறப்படுகின்றது. எனினும், இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீடியோவில் காணப்படும் கல் உண்மையிலேயே நாகமணிதானா என்ற கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்த வீடியோ 11,165,908 வியூஸ்களைப் பெற்றுள்ளது.
பலர் இந்த வீடியோவை ஆர்வத்துடன் பார்த்தாலும், ஒரு விலை உயர்ந்த கல்லுக்காக ஒரு உயிரினத்தை இப்படி வதைப்பது எந்த விதத்தில் நியாயம் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். வாயில்லா ஜீவன்களை மனிதர்கள் தங்கள் சுயநலத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் பயன்படுத்தும் பழக்கம் எப்போது முடிவடையும் என்ற கவலையையும் பலர் வெளிப்படுத்தியுள்ளனர். பல வித விமர்சனங்கள் இந்த வீடியோவுக்கு வந்த வண்ணம் உள்ளன.
நாகமணி: கற்பனையா / உண்மையா?
வராஹ மிஹிரு எழுதிய பிருஹத்சம்ஹிதையின்படி, நாகமணி ஒரு கற்பனைக் கதை அல்ல. இது பாம்பின் தலையில் இருக்கும் விலைமதிப்புமிக்க புனிதமான கல்லாக கருதப்படுகிறது. நாகப்பாம்புகள் மிகவும் அரிதானவை. நாகமணியுடன் கூடிய பாம்பு மிகவும் பிரகாசமாக இருக்கும் என்று வராஹ மிஹிரு கூறுகிறார். அந்தப் பாம்பிலிருந்து வெளிப்படும் ஒளி நெருப்பு போன்ற ஒளியைக் கொடுக்கிறது. நாகமணியை தாங்கியிருக்கும் நாகப்பாம்புகள் இருக்கும் பகுதி முழுவதும் பிரகாசமாக காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோரு
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு எரிதல், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தவறான உணவுப் பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உணவு பழக்கங்களில் சில மாற்றுதல்கள் செய்வது நல்ல பலன தரும் என்கின்றனர் மருத்துவர்கள். அசிடிட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பது அசிடிட்டிக்கு முக்கிய காரணம். ஜீரணிக்க எதுவும் இல்லாத போது, வயிற்றின் அமிலம் வயிற்றின் உட்புறப் சுவர்களை தாக்கி அதனை மெலியச் செய்கிறது. மேலும் சாப்பிட்ட பிறகு தூங்கவோ, படுக்கவோ கூடாது. சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது,
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று(மார்ச் 31) வெளியாக உள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். எனினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா நோய் பரவல், மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். தேர்தல் முடிந்தபின் கட்டுப்பாடுக
Comments
Post a Comment