தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
நாகப்பாம்பின் தலையை வெட்டி நாகமணியை எடுத்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ...
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
King Cobra Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் கண்களையே உங்களால் நம்ப முடியாது. வீடியோவை பார்த்து மனம் பதபதைப்பதையும் தவிர்க்க முடியாது.
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது.
இதில் ஒரு நபர் நாகப்பாம்பின் தலையில் இருந்து நாகமணியை வெளியே எடுப்பதை காண முடிகின்றது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது..
வைரல் வீடியோ: நாகமணி!! இந்தப் பெயரை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். நாகப்பாம்பின் தலையில் ரத்தினம் இருப்பதாகவும், அதற்கு 'நாகமணி' என்று பெயர் என்றும் நமது பெரியோர்கள் கூறியுள்ளனர். நாகமணி தொடர்பான பல கதைகளை புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். ஆனால் உண்மை என்ன என்பது இன்னும் பெரிய மர்மமாகவே உள்ளது. சிலர் நாகமணி இருப்பதாக நம்புகிறார்கள், பலரோ நாகமணி என்று ஒன்று இல்லை என்றே கூறுகிறார்கள்.
ஆனால், இந்த சந்தேகத்துக்கு பதிலளிக்கும் வகையில், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபர் நாகப்பாம்பின் தலையில் இருந்து நாகமணியை வெளியே எடுப்பதை காண முடிகின்றது. இது உண்மையில் நாகமணிதானா என்பது தெரியவில்லை. எனினும், சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வயல்களுக்கு இடையே உள்ள மண் சாலையில் நாகப்பாம்பு ஒன்று இருப்பதை வீடியோவின் துவக்கத்தில் காண்கிறோம். அதன் அருகில் ஒரு துணியுடன் நிற்கும் ஒரு நபர் அதை கட்டுப்படுத்த முயல்கிறார். அந்த நபர் முன்னோக்கி நடந்தால், பாம்பு தனது உடலை வளைத்து பின்னோக்கி செல்கிறது. பாம்பு சாலையைக்கடந்து வயல்களுக்குள் செல்ல முயலும் போது அவர் அந்த பாம்பை பிடிக்க முயல்கிறார். பல முறை அவர் அதை பிடித்த போதிலும், பாம்பும் ஒவ்வொரு முறையும் அவர் பிடியிலிருந்து நழுவி விடுகிறது. இதற்கிடையில் பாம்பு அவரை கடிக்கவும் முயற்சிக்கிறது. ஆனால், அந்த நபர் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொள்கிறார்.
இறுதியாக, அவர் ஒரு வழியாக, பாம்பை பிடித்து விடுகிறார். பாம்பை பிடித்த அந்த நபர் அதன் தலையை கத்தியலால் வெட்டுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. தலையின் ஒரு பகுதியை கத்தியால் கிழிக்கும் நபர் அங்கிருந்து சிறிய ரத்தினம் போன்ற ஒன்றை வெளியே எடுக்கிறார். பின்னர் அவர் அந்த பாம்பை கையில் பற்றிக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. நாகமணியை எடுத்த பின்னர் அந்த பாம்பை அந்த நபர் வயல்களில் விட்டுவிட்டார் என இந்த வீடியோ பற்றி கூறப்பட்டாலும், அந்த காட்சிகளை வீடியோவில் காண முடியவில்லை.
நாகப்பாம்பின் தலையிலிருந்து நாகமணி எடுக்கப்படும் அரிய வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ பழைய வீடியோ என்று கூறப்படுகின்றது. எனினும், இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீடியோவில் காணப்படும் கல் உண்மையிலேயே நாகமணிதானா என்ற கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்த வீடியோ 11,165,908 வியூஸ்களைப் பெற்றுள்ளது.
பலர் இந்த வீடியோவை ஆர்வத்துடன் பார்த்தாலும், ஒரு விலை உயர்ந்த கல்லுக்காக ஒரு உயிரினத்தை இப்படி வதைப்பது எந்த விதத்தில் நியாயம் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். வாயில்லா ஜீவன்களை மனிதர்கள் தங்கள் சுயநலத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் பயன்படுத்தும் பழக்கம் எப்போது முடிவடையும் என்ற கவலையையும் பலர் வெளிப்படுத்தியுள்ளனர். பல வித விமர்சனங்கள் இந்த வீடியோவுக்கு வந்த வண்ணம் உள்ளன.
நாகமணி: கற்பனையா / உண்மையா?
வராஹ மிஹிரு எழுதிய பிருஹத்சம்ஹிதையின்படி, நாகமணி ஒரு கற்பனைக் கதை அல்ல. இது பாம்பின் தலையில் இருக்கும் விலைமதிப்புமிக்க புனிதமான கல்லாக கருதப்படுகிறது. நாகப்பாம்புகள் மிகவும் அரிதானவை. நாகமணியுடன் கூடிய பாம்பு மிகவும் பிரகாசமாக இருக்கும் என்று வராஹ மிஹிரு கூறுகிறார். அந்தப் பாம்பிலிருந்து வெளிப்படும் ஒளி நெருப்பு போன்ற ஒளியைக் கொடுக்கிறது. நாகமணியை தாங்கியிருக்கும் நாகப்பாம்புகள் இருக்கும் பகுதி முழுவதும் பிரகாசமாக காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர் இருமல், தொண்டைப்புண், தொண்டை வீக்கம், தாடை வலி, தலைவலி, தலைபாரம் , மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும். குளிர் அல்லது மழைக்காலம் வந்தாலே சளி, தொண்டை பிரச்சனைகள் வந்துவிடும். அப்படி சளி சேர்ந்துவிட்டாலே குறைந்தது 7 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நாம் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலம் என்பது நெருக்கடியான பருவநிலை எனலாம். அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம் , எதையும் சாப்பிட முடியாது , கண்ணங்கள் , தாடைகளில் வலி என பல அறிகுறிகள் இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட முடியாது. இவ்வாறு தொண்டையில் சளி கட்ட என்ன காரணம் தெரியுமா..? அதாவது குளிர்காலத்தில் காற்றின் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது சைனஸ் பிரச்சனை உருவாகிறது. இந்த பாக்டீரியாக்கள் சைனஸ் அறைக்குள் சென்று சளி சவ்வுகளை வீங்க வைத்து அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால்...
நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் மிகவும் பயன்படும். ஆரோக்கியமான உணவு மற்றும் சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். தொப்பையை குறைக்க மூன்று சிறந்த பயிற்சிகள்: 1. இரு கால்களையும் நீட்டி செய்யும் பயிற்சி முதலில்...
பசிக்குது ஆனா கையில் காசில்லையா? அப்போ இலவசமாகவே பிரியாணி எடுத்து சாப்பிடலாம்! பசிக்குதா எடுத்துக்குங்க..." இப்படி ஒரு போர்ட் வைக்கப்பட்டிருக்கிறது அந்த கடையில். அப்பகுதி வழியாக வருவோரும், போவோரும் கடையை பார்த்து ஒரு நிமிடம் உண்மைதானா என்று தங்களைக் கிள்ளி பார்க்கிறார்கள். அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கடையில் பார்ப்போம். கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருபவர்கள் சதீஷ், சப்ரினா தம்பதியினர். சதீஷ் திருப்பூரில் முட்டை விற்பனை கடை வைத்து வருகிறார். சப்ரினா பிஎஸ்சி சைக்காலஜி படித்திருக்கிறார். சப்ரினா தன்னுடைய வீட்டு முன்பு ஒரு சாப்பாடுக் கடை வைத்திருக்கிறார். சாலையோரமாக இருக்கும் சிறிய கடை அது. நாள்தோறும் மதியம் 12 மணிக்கு கடை திறந்தால், 3 மணி வரைதான் கடை இயங்கும். அந்த பிரியாணி கடையில், ஒரு பிளேட் பிரியாணி எவ்வளவு தெரியுமா? வெறும் 20 ரூபாய் தான். வீட்டிலேயே பிரியாணி செய்து அதை பொட்டலங்களாகக் கட்டி, கடையில் வைத்துள்ளார் சப்ரினா... அந்த ஒரு பெட்டி மீது நிறைய பிரியாணி பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். 3 மணிக்கு முன்பே அத்தனை பொட்டல...
Comments
Post a Comment