நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Whatsappல் ஒருவரால் நீங்கள் ப்ளாக் செய்யப்பட்டதை அறிவது எப்படி? புகைப்படங்களுடன் எளிய விளக்கம்...

 பெரும்பாலான சமூக ஊடகங்கள் பிளாக் விருப்ப தேர்வுடன் வருகிறது. ஏனெனில் விரும்பதகாத செயல்களில் இருந்து தப்ப மற்றும் தேவையில்லாத நபர்களிடம் இருந்து விலகி செல்ல இது உதவுகிறது.


சரி, வாட்ஸ் ஆப்பில் ஒருவர் உங்களை பிளாக் செய்து வைத்துள்ளார் என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

வாட்ஸ் அப் குரூப்

குறித்த நபரின் எண்ணை புதிய வாட்ஸ் அப் குழுவில் சேர்க்க முயற்சிக்கும் போது அது முடியவில்லை என்றால் அவர் உங்களை ப்ளாக் செய்துள்ளார் என அர்த்தம்.

வாட்ஸ் ஆப்பில் யாராவது உங்களை பிளாக் செய்தால் சுயவிவரப் படம் திடீரென மறைந்துப் போகும். இதற்கான ஒரு காரணம் அவர் உங்களை பிளாக் செய்திருக்கலாம். அதே நேரம் அவர் தனது சுயவிவரப் படத்தை நீக்கியிருக்கவும் வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

வாட்ஸ் அப் அழைப்பு

ஒருவர் உங்களை பிளாக் செய்துவிட்டார் என்று நீங்கள் நினைத்தால் அவருக்கு அழைப்பு செய்து பாருங்கள் அது Ringing என தொடர்ந்து காட்டாமல் இருந்தால் ப்ளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.

Send Message

உங்களை வாட்ஸ் ஆப்பில் ஒருவர் பிளாக் செய்துவிட்டால் உங்களால் அவருக்கு வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி அனுப்ப முடியாது. இதை கண்டுபிடிக்க நீங்கள் சந்தேகப்படும் நபருக்கு ஒரு செய்தியை அனுப்பி பாருங்கள். பல மணி நேரமாக அந்த மெசேஜ் சென்று சேரவில்லையெனில் உங்களை அவர் ப்ளாக் செய்துவிட்டார் என புரிந்து கொள்ளலாம்.

உங்களால் ஒருவரின் ஓன்லைன் நிலை அல்லது தொடர்பின் கடைசிப் பார்வையைப் பார்க்க முடியவில்லை என்றால், நீங்கள் ப்ளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.  



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!