நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

20 நாளில் எடையை குறைக்கனுமா? இந்த டயட் சாரட்டை பின்பற்றி பாருங்க.. விரைவில் பலன் தெரியுமா?

 பொதுவாக உடல் எடையை குறைக்க உணவிலும் சில பல மாற்றங்களைச் செய்ய வேண்டி கட்டாயம் இருக்கும்.

எனவே உங்களின் உடல் எடை மிகவும் அதிகரித்து, அதைக் குறைக்க நீங்கள் விரும்பினால் பயனுள்ள டயட் சாரட்டை பின்பற்றுவது அவசியம்.

அந்தவகையில் 20 நாளில் எடையை குறைக்க சூப்பரான டயட் சாரட் ஒன்றை இங்கே பார்ப்போம்.   

காலை நேர உணவு

ஒரு குவளையில் வெள்ளரியை போட்டு, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சிறிது நேரம் கிளாஸில் அப்படியே விட்டு, பின் அந்த தண்ணீரை குடிக்கவும். இதனை தினமும் காலையில் எழுந்ததும் வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை தண்ணீர் குடிக்கவும். இதை குடிப்பதால், உங்கள் இரத்த ஓட்டம் சீராகி, வாயு, வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகளும் விலகும்.

அதேபோல் காலை உணவில் சாம்பாருடன் மற்றும் தோசை அல்லது இட்லி எடுத்துக்கொள்ளலாம். சிறிது நேரம் கழித்து, கிரீன் டீ குடிக்கவும். காலை 11 மணி அளவில் டீ குடித்தால் உடல் எடை குறையும்.

மதிய நேர உணவு

 மதிய உணவில் குறைந்த கலோரி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு, ஓட்ஸ் சப்பாத்தியுடன் ஒரு முழு கிண்ணம் காய்கறிகளை சாப்பிடலாம்.

இதனுடன், உங்கள் மதிய உணவில் தயிர் மற்றும் சாலட்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மதிய உணவு சாப்பிட்ட பிறகு, சுமார் 4 மணி கழித்து இளைநீர் குடிக்கவும். இது உடலில் ஏற்படும் தேவையற்ற கலோரிகளை எரிக்க உதவும்.

இரவு நேர உணவு

இரவு உணவில் நீங்கள் காய்கறி போட்டு சூப் செய்து குடிக்கலாம். இதனுடன், கருப்பு பீன்ஸ், ராஜ்மா போன்றவற்றையும் சாப்பிடலாம்.

எடை இழப்புக்கு பீன்ஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது . இந்த உணவில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளதால் இவை உடல் எடையை குறைக்க உதவும்.   



ALSO READ : உங்கள் முகத்தை பளிச்சிட வைக்க வேண்டுமா? காஃபி தூளை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்...

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!!