நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆரோக்கியமான முருங்கைக்கீரை திணை அடை தோசை... இரவு டின்னருக்கு பிளான் பண்ணுங்க...

 திணையில் அடை மாவு அரைத்து அதில் முருங்கைக்கீரை சேர்த்து சூடாக சுட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா..? இதுவரை ருசித்ததில்லை எனில் உங்களுக்கான ரெசிபி இதோ...


அடை தோசை என்றாலே அரிசி மாவில் செய்யதான் யோசிப்பீர்கள். திணையில் அடை மாவு அரைத்து அதில் முருங்கைக்கீரை சேர்த்து சூடாக சுட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா..? இதுவரை ருசித்ததில்லை எனில் உங்களுக்கான ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள் :

திணை - 1கப்

கடலை பருப்பு - 1/2 கப்

கருப்பு உளுந்து - 1/2 கப்

துவரம் பருப்பு - 1/2 கப்

காய்ந்த மிளகாய் - 2

மிக்ஸ் செய்ய...

வெங்காயம் - 1 கைப்பிடி

கறிவேப்பிலை - 1 கொத்து

பெருங்காயத்தூள் - 1/4 tsp

முருங்கைக்கீரை - 1 கைப்பிடி

தேங்காய் துருவல் - 1 கைப்பிடி

உப்பு - தே.அ


செய்முறை :

திணை, கடலைப் பருப்பு, உளுந்து, துவரம் பருப்பு , காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் நன்கு கழுவிய பின் ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஊறியதும் மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு மிக்ஸ் செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.

மாவு கெட்டிப்பதத்தில் இருந்தால்தான் அடை வரும்.

மாவு தயாரானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து தடிமனாக ஊற்றி எண்ணெய் சுற்றிலும் ஊற்றி மொறுவலாக சுட்டு எடுங்கள்.

அவ்வளவுதான் திணை அடை தோசை தயார்...





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!