நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் எடையை குறைக்க எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?

 இரவில் ஒருவருக்கு போதுமான உறக்கம் இருந்தால் பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதோடு உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  


  • சரியாக தூங்காவிட்டால் உடல் எடை குறையாது என்று சில ஆய்வுகள் கூறுகிறது.
  • லெப்டின் என்கிற ஹார்மோன் நாம் சாப்பிடும் அளவை கணித்து போதும் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது.
  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினசரி ஏதேனும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

ஒவ்வொருவரது உடல் ஆரோக்கியத்திற்கு உணவு பழக்கவழக்கம், சுறுசுறுப்பான செயல்முறை போன்றவை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முக்கியமானது நல்ல உறக்கம்.  ஒருவருக்கு சரியான உறக்கம் இல்லையென்றால் அவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், அறிவாற்றல் குறைவு மற்றும் மனநல கோளாறுகள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்று பல செய்திகளை நாம் கேட்டறிந்திருப்போம். ஆனால் தூக்கத்திற்கும், எடை குறைப்பிற்கும் சம்மந்தம் உள்ளது பற்றி நாம் பெரிதாக கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.  ஒருவரது மோசமான தூக்க பழக்கவழக்கம் ஆரோக்கிய கோளாறுகளை ஏற்படுத்துவதோடு உடல் பருமனடைய செய்கிறது.  உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சரியாக தூங்காவிட்டால் அவர்களது உடல் எடை குறையாது என்று சில ஆய்வுகள் கூறுகிறது.

போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு உடலில் கிரெலின் எனும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது, இது நமது சாப்பிடும் ஆர்வத்தை தூண்டும் ஹார்மோனாகும்.  இதன் காரணமாக நீங்கள் அதிக உணவு உட்கொண்டு உடல் எடை அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.  லெப்டின் என்கிற ஹார்மோன் நாம் சாப்பிடும் அளவை கணித்து போதும் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது, நாம் சரியாக தூங்கவில்லையெனில் இந்த ஹார்மோன் ஒழுங்காக செயல்படாது.  அதோடு சரியாக  இருந்தால் நமக்கு சோர்வு ஏற்படும், இதனால் நமக்கு உடல் செயல்பாடுகள் குறைந்து நமது எடை அதிகரிப்பு நிகழ்கிறது.  உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தொடர்ந்து நிம்மதியாக தூங்க வேண்டும்.


மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினசரி ஏதேனும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும், இரவு தூங்குவதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டு முடிக்க வேண்டும்.  இரவு தூங்க செல்வதற்கு முன் எளிய பயிற்சிகள் அல்லது தியானம் போன்றவற்றை செய்யலாம், தூங்குவதற்கு முன்னர் காஃபின் பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் மது, புகைபிடிப்பதைத்தவிர்க்க வேண்டும்.  மேலும் தூங்க செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே கணினி, செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.






Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!