நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பயணத்தின் போது பாதியாக பிரிந்த ரயில்..! - இங்கிலாந்தில் அதிகாரிகளை பதறவிட்ட டிக் டாக் யூசரின் வீடியோ...

 Viral Video | இங்கிலாந்தில் ரயில் பயணம் செய்த டிக் டாக் யூசர் முதல் முறையாக ரயில் பயணம் செய்த நிலையில், தான் சென்ற ரயில் பாதியிலேயே பிரிந்து போச்சு. தயவு செய்து கொஞ்சம் என்னை காப்பாற்றுங்கள் என்று கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது.


ரயிலில் பயணம் செய்வது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் முதல் முறையாக ரயிலில் பயணம் செல்கிறார்கள் என்றால் சந்தோஷத்துடன் ஒருவித அச்சத்தையும் அனைவருக்கும் ஏற்படுத்தும். எந்த கம்பார்ட்மென்டில் ஏறுவது? ரயில் எந்த பிளாட்பாரத்தில் வரும் என்றெல்லாம் பல யோசனைகள் மனதிற்குள் எழக்கூடும். அதே சமயம் சரியான நேரத்தில் ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டால் அப்பாடா.. என்று அச்சம் எல்லாம் பறந்தோடிவிடும்.

ஆனால் இங்கிலாந்தில் ரயில் பயணம் செய்த டிக் டாக் யூசர் முதல் முறையாக ரயில் பயணம் செய்த நிலையில், தான் சென்ற ரயில் பாதியிலேயே பிரிந்து போச்சு. தயவு செய்து கொஞ்சம் என்னை காப்பாற்றுங்கள் என்று கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானதோடு, இரயில்வே துறை அதிகாரிகளைப் பதற செய்துள்ளது. அப்படி என்ன தான் நடந்தது? வீடியோவில் என்ன சொல்லியிருக்கிறார் டிக் டாக் யூசர் என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

டிக்டாக் யூசர் ஒருவர், இங்கிலாந்தில் முதல் முறை ரயில் பயணம் மேற்கொள்கிறார். ஒருவித உற்சாகத்தில் பயணம் செய்த இவர் பதிவிட்ட வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் டிவிட்டரில் பதிவிட்ட வீடியோவில் இங்கிலாந்தில் முதன் முறையாக ரயில் பயணம் செய்தேன் எனவும், தற்போது என்னுடைய ரயில் பாதியிலேயே பிரிந்து சென்றது தனக்கு பயத்தை ஏற்படுகிறது. மேலும் மொபைலில் 3 சதவீத பேட்டரி மட்டும் தான் உள்ளது மற்றும் 2 பவுண்ட் பணம் தான் என்னிடம் உள்ளது. தவறான வழியில் செல்வதால் எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள் என்று வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.

கண்ணீருடன் பதிவான இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், அடுத்த நிமிடமே இது உண்மை தானா? இங்கிலாந்தில் ரயில்கள் பிரிந்து செல்கின்றனவா? என கேட்டுள்ளனர். டிக் டாக் யூசரும் ஆம் இது உண்மைதான் என பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு யூசர் ஒருவர், நான் லண்டனில் தான் பல ஆண்டுகள் வசிக்கிறேன். இதுவரை இது போன்ற சம்பவங்கள் நடந்ததே இல்லை எனவும் குறிப்பாக வடக்கு இங்கிலாந்தில் இரண்டு வெவ்வேறு திசைகளில் ரயில்கள் பிரிந்து செல்வதை நான் பார்த்ததே இல்லை என பதிவிட்டுள்ளனர்.

இது போன்ற விவாதங்கள் டிவிட்டரில் வெளிவந்த நிலையில், இச்செய்தி ரயில் அதிகாரிகளுக்கும் தெரிய வந்துள்ளது. அப்போது என்ன நடந்தது? என விசாரிக்கையில் ரயில் நிலையத்தில் வெளியான பொது அறிவிப்பை தன்னுடைய ஹெட்போன்கள் காரணமாக தவறிவிட்டிருப்பாரா? என அதிகாரிகள் யூகித்தனர். இதனையடுத்து அதிகாரிகளின் உதவியோடு அவர் எங்கியிருக்கிறார் என கண்டறிப்பட்டது.

பின்னர் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நான் உரிய இடத்திற்கு வந்துவிட்டேன் என்று மீண்டும் டிக் டாக் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் நெட்டிசன்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ALSO READ : உலகின் முதல் Satellite இணைப்பு ஸ்மார்ட் போன் வந்தாச்சு!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!