நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பாலைவனத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள்... எட்டு மணி நேரப் போக்குவரத்து நெரிசல்... காரணம் இதுதான்....

 Burning Man Festival : எரியும் மனிதன் திருவிழாவில் கலந்துகொள்ளவந்தவர்கள் பாலைவனத்தில் 8 மணி நேரம் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டனர்.

மெரிக்காவில் உள்ள நெவாடா பகுதியில் 9 நாட்கள் எரியும் மனிதன் திருவிழா (Burning Man Festival) என்ற இசை மற்றும் கலாச்சாரம் கலை விழா நிகழ்ச்சியைக் காண வந்தவர்கள் நிகழ்ச்சியின் முடிவில் பெரிய கூட்டமாய் திரும்போது அந்த பகுதி நீண்ட வாகன நெரிசலுக்கு உள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

நெவாடா பகுதியில் நடக்கும் முக்கிய இசை விழாவான இந்த நிகழ்ச்சியைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்து இருந்தனர். இந்த நிலையில் 9 நாட்கள் நடைபெற்ற விழா நேற்றுடன் முடிவடைந்தது. மக்கள் கூட்டம் மொத்தமாய் தங்கள் பகுதிகளுக்குத் திரும்பும் நிலையில் கருப்பு பாறை பாலைவனம் என்ற பகுதி சாலையில் நீண்ட போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் 8 மணி நேரம் அந்த பாலைவனத்தில் மக்கள் சிக்கிக் கொண்டனர்.

தற்போது அந்த நெரிசலில் சிக்கிய வாகனங்களில் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையைச் சமாளிக்க எரியும் மனிதன் திருவிழா நடத்தும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களே அவர்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டனர். அதில் அனைவரையும் பொறுமையுடன் இருக்கும்படியும் மேலும் மாற்று வழிகளைக் கொடுத்தும் வழி நடத்தினர்.

கடந்த 3 வருடங்களாக இந்த இசை நிகழ்ச்சி கொரோனா காரணமாக நடைபெறவில்லை. அன்று விழாவின் கடைசி நாள் என்பதால் சுமார் 80,000க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்துகொள்ள வந்து இருந்தனர். மக்கள் வெளியேற முடியாமல் சுமார் 8 மணி நேரம் மைல்கள் தூரம் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர்.
அமெரிக்காவில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இந்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவோர் வண்ணமயமான வினோதமான ஆடைகள் அணிந்து அமெரிக்க மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!