நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஹோட்டல் சுவையில் நாவூறும் மொறு மொறுப்பான தோசை - செய்வது எப்படி?

 இந்தியர்கள் விரும்பி உண்ணும் ஒரு உணவு என்றால் அது இட்லி, தோசை தான். தோசையில் பல வகை உண்டு.

ஆனால் பலருக்கும் வீட்டில் செய்யும் தோசை விட ஹோட்டல் ஸ்டைலில் சுடும் தோசையையே அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.

அந்த வகையில் சுவையான தோசையை எப்படி வீட்டிலிருந்தபடியே செய்வது என்பதை பற்றி இங்கே பார்ப்போம். 


தேவையான பொருட்கள்

புழுங்கல் அல்லது இட்லி அரிசி - 200 கிராம்

பச்சரிசி - 200 கிராம்

வெள்ளை முழு உளுந்து - 100 கிராம்

கடலைப் பருப்பு - 25 கிராம்

வெந்தயம் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை விளக்கம்

முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, முழு உளுந்து, கடலைப் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை நன்றாக கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த அனைத்தையும் கிரைண்டரில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.

நடு நடுவே தண்ணீர்ஊற்றி 20 நிமிடம் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த மாவை 10 மணி நேரம் புளிக்க விடவும்.

அதன் பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லிய தோசையாக வார்த்து எடுக்கவும்.

இந்த சுவையான தோசைக்கு காரசட்னி, தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.



ALSO READ : ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கம்பு கேழ்வரகு தேங்காய் புட்டு- செய்வது எப்படி?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!