நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எள்ளு விதைகளை இப்படி பயன்படுத்தி பாருங்க! முகம் ஒரே இரவில் பளபளப்பாகுமாம்...

 இன்றைக்கு பலரும் முகத்தின் அழகை மேம்படுத்த பல வழிகள் உள்ளன. ஆனால் நாம் சிலர் செயற்கை முறைகளே பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும் இது தற்காலிகம் தான். இருப்பினும் முகத்தின் அழகை ஒரே இரவில் மாற்றிவிட ஒரு சிறிய விதையே போதும்.

அது வேறொன்றும் இல்லை. அதுதான், எள்ளு.

எள்ளில் இருந்து செய்யப்படும் ஒரு சில குறிப்புகளை வைத்து முக அழகை பளபளவென பெற்று விடலாம். எவ்வாறு இதனை பெற வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம். 

முதலில் எள்ளை பொடியாக அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் மஞ்சள் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவி வந்தால் பருக்கள் காணாமல் போய் விடும். அல்லது நல்லெண்ணெய் 1 ஸ்பூன் எடுத்து கொண்டு அதனுடன் ஆப்பிள் சீடர் வினிகர் சிறிது சேர்த்து கொண்டு முகத்தில் தடவினால் முகப்பருக்களை ஒழித்து விடலாம்.

அரிசி மாவுடன் நல்லெண்ணையை கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் பளபளப்பாகும். அத்துடன் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி மென்மையான சருமத்தை தரும்.

முதலில் பிரவுன் சுகருடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து யுகலிப்டஸ் எண்ணெய்யை சிறிது இதனுடன் சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள கருமைகள் நீங்கி விடும்.   



ALSO READ : தொப்பையை வெண்ணை போல் கரைக்க வேண்டுமா? அப்போ இந்த மேஜிக் பானங்களை தவறாமல் குடிங்க போதும்...

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!