நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கலிபோர்னியா சாலைகளில் நடந்து செல்லும் கால்நடை மருத்துவர் ஒருவர் வீடற்றவர்களின் செல்லப்பிராணிகளுக்கு மருத்துவம் பார்க்கிறார்.


கலிபோர்னியா சாலைகளில் நடந்து செல்லும் கால்நடை மருத்துவர் ஒருவர் வீடற்றவர்களின் செல்லப்பிராணிகளுக்கு மருத்துவம் பார்க்கிறார்.

செல்லப்பிராணிகளை தங்கள் குழந்தைகளாகவே வளர்ப்பவர்கள் பலர் உண்டு. வசதிக்கும் அன்புக்கும் தொடர்பில்லை என்பது போல வீடுகள் இல்லாதவர்களும் செல்லப்பிராணிகளை தங்களுடன் வளர்த்து வருவார்கள். சாலையோரங்களில் வசிக்கும் பலர் தங்கள் செல்லப்பிராணிகளுடன் உறங்குவதை பார்க்கலாம். நம் நாட்டைப்போலவே அமெரிக்காவிலும் சாலைகளில் வசிக்கும் வீடற்றவர்கள் பலர் செல்லப்பிராணிகளை அன்புடன் வளர்த்து வருகிறார்கள்.

அந்த செல்லப்பிராணிகளுக்காவே ஒரு கால்நடை மருத்துவர் அமெரிக்காவின் கலிபோர்னியா சாலைகளில் நடந்துகொண்டிருக்கிறார். அவர்தான் வேன் ஸ்டவார்ட். 49 வயதான வேனுக்கு சிறு வயது முதலே விலங்குகள் மீது அன்பு. செல்லப்பிராணிகளை அன்புடன் கவனிப்பது அவருக்கு பிடித்தமான ஒன்று. கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளை தத்தெடுப்பது, வளர்ப்பது என்று வளர்ந்த வேன், பள்ளிப்படிப்பை முடித்ததும் கால்நடை மருத்துவராக ஆனார். தற்போது கலிபோர்னியா சாலைகளில் காலார நடந்து செல்லும் வேன், வீடற்றவர்களின் செல்லப்பிராணிகளுக்கு மருத்துவம் பார்க்கிறார்.


இலவசமாக மருத்துவம் பார்ப்பது மட்டுமில்லாமல் செல்லப்பிராணிகளுக்கு தேவையான மருத்து, உணவு போன்ற தேவைகளுக்கும் உதவி செய்து வருகிறார். பல நேரங்களில் சிலர் வேனைத் தேடி மருத்துவமனைக்கும் வருகின்றனர். செல்லப்பிராணிகளுக்காக தனி நிதி திரட்டும் பக்கத்தை தொடங்கி அதன் மூலம் நிதி சேகரித்து தன்னால் ஆன உதவியையும் வேன் செய்து வருகிறார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!