நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ராட்சத ஓநாய் சிற்பம்

 


சுவர் ஒன்றின்மீது பொருத்தப்பட்டுள்ள இந்த ராட்சத ஓநாய் சிற்பம், விலங்குகளின் மென்முடி வர்த்தகத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டது. லத்வியாவின் கலைப்பள்ளியைச் சேர்ந்த அலெக்சாண்டர் மரினோகாவும் அவரது தந்தை ஒலெக்ஸ்  மரினோகாவும் வடிவமைத்த இச்சிலையை உருவாக்க 100க்கும் அதிகமானோர் உதவினர். உலோகக் கம்பிகளாலும் சணல் நாறுகளாலும் இச்சிற்பம் பல மாத உழைப்புக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளது.

செக் குடியரசு, லக்ஸம்பர்க் உள்ளிட்ட சுமார் 15 ஐரோப்பிய நாடுகளில் விலங்குகளின் மென்முடி வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது.


ALSO READ: https://tamildhamakanews.blogspot.com/2020/12/blog-post_265.html

LINK

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!