நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா தடுப்பூசி பணிகளுக்கான ஒத்திகை வெற்றி; மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

 

இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு தீவிர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன

இங்கிலாந்து, அமெரிக்கா, ர‌ஷியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு தீவிர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன

இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ‘ஆஸ்ட்ராஜெனகா’ நிறுவனமும் இணைந்து, கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரித்துள்ளது. இதை, நம் நாட்டில் பரிசோதித்து, தயாரிக்கும் பொறுப்பை, மராட்டிய மாநிலத்தை சேர்ந்த, சீரம் இந்தியா நிறுவனம் ஏற்றுள்ளது.

இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி, அடுத்த மாதம் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தடுப்பூசி வழங்கும் பணிகளுக்கான நடைமுறைகளை, சோதனை ஓட்ட அடிப்படையில் செய்து பார்க்க, மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில், தலா 2 மாவட்டங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சோதனை ஓட்ட பயிற்சிகள் நடந்தது.

தடுப்பூசி வழங்கும் பணிகளுக்காக, ‘கோ வின்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பயனாளர்களின் தகவல்களை பதிவேற்றுவதில் துவங்கி, தடுப்பூசி வைக்கப்படும் குளிர்பதன கிடங்கு பரிசோதனை, அங்கிருந்து, தடுப்பூசி மையத்திற்கு மருந்துகளை எடுத்து வருவது உள்ளிட்ட நடைமுறைகள், இந்த சோதனை ஓட்ட பயிற்சியின் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சோதனை ஓட்ட முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்துவதை தவிர, மற்ற அனைத்து பணிகளில் உள்ள நடைமுறை சிக்கல்களை கண்டறிந்து, அதை முன்கூட்டியே களையவே, இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!