நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தமிழகத்தில் ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை.


தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜனவரி 2 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

சுகாதாரத்துறையினர், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி அசாம், ஆந்திரா, பஞ்சாப், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் வெற்றிகரமாக ஒத்திகை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மற்ற மாநிலங்களிலும் ஜனவரி 2 ஆம் தேதி முதல் ஒத்திகை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!