நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Watch Video: Teddy Bear-ல் இறந்த மகனின் இதயத்துடிப்பை கேட்டு அழுத தந்தை..!!!

 


எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை உயிராக நேசிப்பார்கள்.அவர்களை இழக்க யாரும் விரும்புவதில்லை.


எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை உயிராக நேசிப்பார்கள்.அவர்களை இழக்க யாரும் விரும்புவதில்லை. 


அமெரிக்காவை (America) சேர்ந்த ஜான் ரெய்ட் என்பவர், கடந்த வருடம் நடந்த ஒரு கார் விபத்தில் தனது 16 வயது மகனை இழந்து விட்டார். அந்த தந்தையின் கண்ணீர் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அது பார்ப்பவர்களின் கண்களை கலங்க வைக்கிறது.மகனை இழந்த அந்த தந்தை தனது மகனின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தார். அதில் அவரது மகனின் இதயம் ஒருவருக்கு பொறுத்தப்பட்டு, அவர் உயிர் பிழைத்தார்.


இறந்த மகனின் இதயத்தை பெற்ற அந்த நபர், அந்த தந்தைக்கு ஒரு டெட்டி பியரை பரிசாக அனுப்பினார். அதில் அவரது இதய துடிப்பு ரெகார்ட் செய்யப்பட்டிருந்தது.

Last year, this man lost his 16-yr old son in a car wreck. He decided to donate his son’s organs, including his heart.


This month the heart recipient sent Dad a surprise gift - a teddy bear with a recording of his son's heartbeat.

அதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் முதலில் அந்த தந்தை பக்ஸை பிரிப்பதை பார்க்கலாம்.அதில் ஒரு கடிதமும் எழுதப்பட்டிருந்தது. அதை படித்த அவர், உணர்ச்சிவசப்படுகிறார். பின்னர் அந்த டெடி பியர் பொம்மையை எடுத்து, அதன் இதய துடிப்பை கேட்டதும், கண்ணீர் விடுகிறார்.

video link

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!