நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டெல்லியில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது என மத்திய அரசு தகவல்....

விவசாயிகளுடன் நடைபெற்ற 6 வது சுற்று பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் சுமார் 5 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்வது, மின்சார திருத்த சட்டத்தை நிறுத்தி வைப்பது என்ற விவசாயிகளின் இரு கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது என்றார்.

மீதமுள்ள இரு கோரிக்கைகளில் ஒன்றான குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பது குறித்து ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறும் 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் விவாதிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!