நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சீனாவில் ஆண்டுதோறும் 35 பி. கிலோ உணவு வீண்

 


பெய்­ஜிங்: உல­கில் ஆக அதிக மக்­கள்­தொ­கை­யைக் கொண்­டுள்ள சீனா­வில் ஒவ்­வோர் ஆண்­டும் 35 பில்­லி­யன் கிலோ உணவு தானி­யங்­கள் வீண­டிக்­கப்­ப­டு­வ­தாக அந்­நாட்­டின் ஸின்­ஹுவா செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.



சேமிப்பு, போக்­கு­வ­ரத்து, பதப்­ப­டுத்­துதல் ஆகிய நிலை­க­ளின்­போது அந்­த­ள­விற்கு தானி­யங்­கள் வீணா­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. காலா­வ­தி­யான சேமிப்­பிட வச­தி­கள், தள­வா­டச் சாத­னங்­கள், பதப்­ப­டுத்­தும் தொழில்­நுட்­பங்­கள் போன்ற பல கார­ணங்­க­ளால் இப்­ப­டிப் பேர­ள­விற்கு தானிய இழப்பு ஏற்­ப­டு­வ­தாக அந்­தச் செய்­தி­ய­றிக்கை குறிப்­பிட்­டுள்­ளது. தேசிய மக்­கள் காங்­கி­ரஸ் மேற்­கொண்ட ஆய்­வின் அடிப்­ப­டை­யில் அந்த அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.



தானி­யங்­களும் உண­வுப்­பொருள்­களும் வீண­டிக்­கப்­ப­டு­வ­தைக் குறைப்­பது உண­வுப் பாது­காப்­பிற்கு இன்­றி­ய­மை­யா­தது என்று அவ்­வ­றிக்கை சுட்­டி­யுள்­ளது.

“போது­மான அளவு தானி­யம் கையி­ருப்­பில் இருந்­தா­லும் நாட்­டில் உண­வுத் தேவைக்­கும் வழங்­க­லுக்­கும் இடையே ஓர் இறுக்­க­மான சம­நிலை நில­வு­கிறது,” என்று அவ்­வ­றிக்கை தெரி­வித்­துள்­ளது. வேளாண் உள்­கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்­த­வும் செயல்­தி­றன்­மிக்க அறு­வடை இயந்­தி­ரத்தை உரு­வாக்­க­வும் தானி­யம் வீணா­குவ­தைக் குறைக்­கும் வகை­யில் விவே­க­மான கிடங்கு­களை அமைக்­க­வும் தேசிய மக்­கள் காங்­கி­ர­சின் அறிக்கை பரிந்­து­ரைத்­துள்­ளது. அத்­து­டன், சீன நக­ரங்­களில் ஒவ்­வோர் ஆண்­டும் உணவு விநி­யோ­கத் துறை­யில் 18 பில்­லி­யன் கிலோ வரை உண­வுப்­பொருள்­கள் வீணா­குவ­தை­யும் அந்த ஆய்வு கண்­டு­பி­டித்­துள்­ளது.

ALSO READ :

https://tamildhamakanews.blogspot.com/2020/12/blog-post_719.html

LINK

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!