நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Shocking: இந்த வாரம் COVID Vaccine, அடுத்த வாரம் Corona Positive: US-ல் பரபரப்பு

 

COVID எதிர்ப்பு தடுப்பூசி பெறுவதற்கு முன்பு மேத்யு நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் அவர் அதை அறிந்திருக்க மாட்டார் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். 


கலிஃபோர்னியா: கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு செவிலியருக்கு, ஒரு முன்னணி மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கோவிட் எதிர்ப்பு மருந்தைப் பெற்ற எட்டு நாட்களுக்குப் பிறகு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேத்யூ டபிள்யூ என அடையாளம் காணப்பட்ட ஈ.ஆர் செவிலியர் டிசம்பர் 18 அன்று தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


'என் கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். இன்னும் சிலரும் என்னுடன் காத்திருந்து தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.” என்று மேத்யூ தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.


இருப்பினும், கிறிஸ்துமசுக்கு முதல் நாள், சான் டியாகோவில் இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் மேத்யுவுக்கு, ஒரு COVID-19 யூனிட்டில் பணிபுரிந்த பின்னர் உடல்நிலை சரியில்லாமல் போனது. ஊடக செய்தியின் படி, மேத்யு டிசம்பர் 26 ஆம் தேதி ஒரு மருத்துவமனைக்கு சென்று கொரோனா வைரஸ் (Coronavirus) பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


முன்னணி சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, மேத்யூவுக்கு நடந்தது ஆச்சரியத்தை அளிக்கும் ஒன்றாக இருந்தாலும், இது எதிர்பாராதது அல்ல. “நீங்கள் எண்களின் அடிப்படையில் பார்த்தால், தொற்றுக்கு மத்தியில் இருப்பவர்களுக்கு இது எதிர்பார்க்கப்பட்டதுதான்” என்று சான் டியாகோவின் குடும்ப சுகாதார மையங்களின் தொற்று நோய் நிபுணரான டாக்டர் கிறிஸ்டியன் ராமர்ஸ் மேற்கோளிட்டுள்ளார்.


ALSO READ : 

ராட்சத ராட்டினத்துடன் அதிஅற்புத சொகுசுக் கப்பல்



COVID எதிர்ப்பு தடுப்பூசி (Vaccine) பெறுவதற்கு முன்பு மேத்யு நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் அவர் அதை அறிந்திருக்க மாட்டார் என்றும் ராமர்ஸ் மேலும் கூறினார். கொரோனா தடுப்பூசி பணித்திட்டம் மெதுவாக செயல்படுவதால், அடுத்த ஆண்டின் முதல் பாதியில் பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான டொனால்ட் டிரம்ப் (Donald Trump) நிர்வாகத்தின் திட்டம் பெரும் தடையைக் கண்டுள்ளது. இதன் விளைவாக, இந்த பணித்திட்டத்தை தற்போதைய விகிதத்தில் முடிக்க கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகலாம் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 20 மில்லியன் அமெரிக்கர்கள் COVID-19 தடுப்பூசியைப் (COVID Vaccine) பெறுவார்கள் என்றும் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் ஜூன் மாத இறுதியில் தடுப்பூசியைப் பெறுவார்கள் என்றும் 'ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்' பணித்திட்ட உறுப்பினர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
எனினும், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) வெளியிட்டுள்ள புதிய தகவல்கள், தடுப்பூசி முயற்சிகள் தேவையை விட மெதுவான வேகத்தில் நகர்கின்றன என்பதைக் காட்டுகிறன. இந்த மாத தொடக்கத்தில் அனுப்பப்பட்ட 11.4 மில்லியன் டோஸ்களில் 2.1 மில்லியன் அமெரிக்கர்கள் மட்டுமே முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

தடுப்பூசி அளிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் இந்த சம்பவத்திற்கு தடுப்பூசி உற்பத்தியாளர் இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  

மூச்சுக்காற்றைக்கொண்டு 3 நிமிடங்களில் கொவிட்-19 பாதிப்பைக் கண்டுபிடிக்கும் சாதனம்; இந்தோனீசியாவில் அறிமுகம்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!