நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மூச்சுக்காற்றைக்கொண்டு 3 நிமிடங்களில் கொவிட்-19 பாதிப்பைக் கண்டுபிடிக்கும் சாதனம்; இந்தோனீசியாவில் அறிமுகம்

 

யோக்யகார்த்தாவில் இருக்கு கட்ஜா மட பல்கலைக்கழகத்தில் GeNose C19 எனும் அந்த மூச்சுக்காற்று ஆய்வு சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது


மூச்சுக் காற்றை ஆய்வு செய்து சில நிமிடங்களுக்குள் கொரோனா தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியும் விரைவு பரிசோதனையை இந்தோனீசியா அறிமுகப்படுத்த உள்ளது.

யோக்யகார்த்தாவில் இருக்கும் கட்ஜா மடா பல்கலைக்கழகத்தில் GeNose C19 எனும் அந்த மூச்சுக்காற்று ஆய்வு சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக் குழுவை வழிநடத்திய பேராசிரியர் குவாட் டிரையானா, முதலில் 100 அத்தகைய மூச்சுக்காற்று ஆய்வு சாதனங்கள் விநியோகிக்கப்படும் என்று கூறினார். அரசு அனுமதித்த பிறகு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற அதிகமானோரைப் பரிசோதிக்கும் இடங்களில் இந்தச் சாதனங்கள் வைக்கப்படும் என்றார் அவர்.

மூச்சுக்காற்று மாதிரிகளைச் சேகரிப்பது, பரிசோதிப்பது ஆகியவை உட்பட இந்தப் பரிசோதனைக்கு 3 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். இந்தப் பரிசோதனைக்கு 15,000 முதல் 25,000 ரூபியா (S$1.40 முதல் S$2.35) வரை ஆகும்.

ஒவ்வொரு சாதனமும் நாள் ஒன்றுக்கு 120 பரிசோதனைகளைச் செய்யும் என்று பேராசிரியர் தெரிவித்தார். தினமும் 1.2 மில்லியன் மக்களுக்கு பரிசோதனைகள் செய்யும் விதத்தில் 10,000 சாதனங்களை உருவாக்குவது இலக்கு  என்கிறது ஆய்வுக் குழு.


Also read : https://tamildhamakanews.blogspot.com/2020/12/blog-post_286.html

link

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!