நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கிருமித்தொற்று போராட்டத்தில் நிலவேம்பு பலன் தருமா? மருத்துவர்கள் கருத்து

 


நிலவேம்புக் குடிநீர் சூரணத்தை குடிநீராக்கிப் பருகுவதினாலேயே சிறந்த பலன்களைப் பெற முடியும் - சித்த மருத்துவர்


  • ம.குணமதி எழில்வேந்தன், சித்த மருத்துவர்


பஞ்ச நிம்பங்களில் ஒன்றான நிலவேம்பு என்ற மூலிகையில் சுரம் குறைக்கும் வேதிப்பொருள்கள் உள்ளன.

அந்த வேதிப்பொருட்கள் சுரத்தையும் ‘வைரஸ்’ கிருமியினால் ஏற்படும் நோயின் தீவிரத்தையும் குறைப்பதோடு நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்டும் தன்மையும் கொண்டிருப்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

முதலில் நிலவேம்புப் பொடியும் நிலவேம்புக் குடிநீரும் ஒன்றல்ல என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

நிலவேம்புக் குடிநீரில் நிலவேம்பு, வெட்டிவேர், சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை வேர், சந்தனம், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு என ஒன்பது மூலிகைகள் கலந்துள்ளன.

டெங்கி, பறவைக் காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற பலவகைப்பட்ட சுரங்கள், சுவாச நோய்கள், கைகால் வலி, வீக்கம் உட்பட பல நோய்களுக்கும் தற்போதைய கொரோனா கிருமித் தொற்றுக்கும் சித்த மருத்துவர்களால் நிலவேம்புக் குடிநீர் பரிந்துரைக்கப் படுகிறது.

நிலவேம்புப் பொடியினை மட்டுமே தனித்துக் குடிநீராக்கிப் பருகுவதை விடுத்து, நிலவேம்புக் குடிநீர் சூரணத்தை குடிநீராக்கிப் பருகுவதினாலேயே சிறந்த பலன்களைப் பெற முடியும். கர்ப்பிணிகளும் ஒரு வயது நிரம்பாத குழந்தைகளும் ஏற்கெனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோரும் இதைத் தவிர்க்க வேண்டும்.


நிலவேம்புக் குடிநீர் பயனளிக்காமல் போகலாம் - ஆயுர்வேத மருத்துவர்



  • வி.சி.அஜித் குமார், ஆயுர்வேத மருத்துவர்


கொரோனா கிருமி ஒரு சளிக்காய்ச்சல் கிருமி.

இது நுரையீரலைப் பாதித்து, தும்மல், இருமல், சுவாச அழற்சி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

சுற்றுப்புறத்தில் பலவிதமான நுண்ணுயிரிகள் இருந்தாலும் அவை எல்லாரையும் பாதிப்பது கிடையாது.

சிறு குழந்தைகள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள், ஏற்கெனவே நுரையீரல் நோய்களால் அல்லல்படுவோர் போன்றவர்களையே அதிகம் பாதிக்கிறது.

கொரோனா கிருமியால் அதிகமாக நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதால் நிலவேம்புக் குடிநீர் பயனளிக்காமல் போகலாம். அதற்குப் பதிலாக, தொண்டையில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரிசெய்ய அதிமதுரம் எனும் மூலிகையை உட்கொள்ளலாம்.

அதனைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. அதனை அன்றாடம் எடுத்துக்கொள்வதன் மூலம் சளிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம். 

ஆயினும், தகுந்த மருத்துவ நிபுணர் ஒருவரின் ஆலோசனைக்குப் பிறகே எந்த மூலிகையையும் உட்கொள்ள வேண்டும் என்றும் ஏனெனில் அவற்றால் வேறு பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!