நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

1,800 ரோஹிங்கியா அகதிகள் தொலைதூர தீவுக்கு வெளியேற்றம்

 


சிட்டகாங் துறைமுகத்திலிருந்து கிளம்பிய கடற்படைக் கப்பலில் காணப் பட்ட ரோஹிங்கியா அகதிகள். ஏழு கப்பல்களில் 1,804 அகதிகள் கண்காணா தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்


இரண்டாம் கட்டமாக ரோஹிங்கியா அக­தி­களை நாட்­டை­விட்டு வெளி­யேற்றி தொலை­தூர தீவுக்கு அனுப்­பும் பணியை பங்­ளா­தேஷ் நேற்று தொடங்­கி­யது.

வங்­காள விரி­கு­டா­வில் அமைந்­துள்ள தாழ்­வான பாசான் சார் தீவில் வெள்­ளம் சூழும் அபா­யம் இருப்­ப­தால் அக­தி­களை அங்கு அனுப்ப வேண்­டாம் என மனி­த­நேய அமைப்­பு­கள் விடுத்த வேண்­டு­கோள்

­க­ளை­யும் மீறி பங்­ளா­தேஷ் அரசு வெளி­யேற்­றும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வரு­கிறது.

ALSO READ :  https://tamildhamakanews.blogspot.com/2020/12/corona.html

LINK


ஏழு கப்­பல்­களில் 1,804 ரோஹிங்கியா அக­தி­கள் ஏற்­றப்­பட்டு தீவுக்­குக் கொண்டு செல்­லப்­ப­டு­வ­தாக பங்­ளா­தேஷ் கடற்­படை தள­பதி அப்­துல்லா அல் மாமுன் சவுத்ரி கூறினார்.

அந்­தத் தீவுக்கு முன்­னரே சென்று சேர்ந்த அவர், அக­தி­களை வர­வேற்­ப­தற்­கான ஏற்­பா­டு­கள் தயா­ராக இருப்­ப­தா­கச் சொன்­னார். விருப்­பத்­தின் பேரி­லேயே தீவுக்­குச் செல்­வ­தாக அக­தி­களில் சிலர் ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னர்.

பங்­ளா­தேஷ் முதற்­கட்­ட­மாக 1,600க்கும் அதி­க­மான ரோஹிங்­ கியா அகதிகளை இம்­மா­தத் தொடக்­கத்­தில் அந்­தத் தீவுக்­குக் கொண்டு சென்று அமர்த்­தி­யது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!