நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இறந்துபோன இணை; உடலருகில் அமர்ந்து துக்கம் அனுசரித்த அன்னப் பறவையால் 23 ரயில்கள் காத்திருப்பு

 

இணை இறந்த துக்கத்தில் அவ்விடத்தைவிட்டு நகராமல் இருந்த அன்னப் பறவை


இணைப் பறவை இறந்த துக்கம் தாளாமல் அதன் உடலருகே அமர்ந்திருந்த அன்னப் பறவையால 23 ரயில்கள் பயணத்தைத் தொடர முடியாமல் காத்திருக்க வேண்டியதாயிற்று.

ஜெர்மனியின் கேசல், கோட்டிங்கன் நகரங்களுக்கிடையேயான அதிவேக ரயில் தடத்துக்கு அருகில் இரு அன்னப் பறவைகள் சுற்றித் திரிந்ததாக கேசல் நகர போலிசார் தெரிவித்தனர்.

அவற்றில் ஒன்று மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்தது. இறந்துபோன பறவையின் உடலுக்கருகில் அமர்ந்த அதன் இணை அவ்விடத்தை விட்டு நகருவதாயில்லை.

அதனால் அந்தத் தடத்தில் செல்ல வேண்டிய 23 ரயில்கள் தங்களது பயணத்தை ஒத்தி வைத்துக் காத்திருந்தன. 

தீயணைப்புப் படையினர் சிறப்பு உபகரணங்களைக் கொண்டு  உயிருடனிருந்த அன்னப் பறவையை அவ்விடத்தில் இருந்து அகற்றினர். பத்திரமாக மீட்கப்பட்ட அது, பின்னர் ஃபுல்டா நதியில் விடப்பட்டது.

சுமார் 50 நிமிட தாமதத்துக்குப் பிறகு ரயில்கள் அந்தத் தடத்தில் பயணத்தைத் தொடர்ந்தன.

கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவம் பற்றிய தகவல்கள் நேற்று வெளியாகின.

பொதுவாக, அன்னப் பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடன் தான் வாழும் என பிரிட்டனின் ராயல் சொசைட்டி பறவைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.


ALSO READ :  https://tamildhamakanews.blogspot.com/2020/12/blog-post_440.html


LINK

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!