நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஜனவரி 2 முதல் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி ஒத்திகை: மத்திய அரசு

 

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை, ஆந்திர மாநிலம் உட்பட நான்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட நிலையில், வரும் 2ம் தேதி நாடு முழுவதும் ஒத்திகை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, இன்று குஜராத்தில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டி நடத்திய உரையில், தடுப்பூசி போடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன என குறிப்பிட்டார். தடுப்பூசி போடும் நடவடிக்கையில், குழப்பம் ஏதும் ஏற்படாமல் இருக்க, பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் இரண்டு நாட்கள் ஒத்திகை நடைபெற்றது. 


இந்நிலையில், தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு தயார் நிலையில் உள்ளது என்பதை மறுஆய்வு செய்ய மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று ஆலோசனை நடத்தினார்.  ஆலோசனையில் பங்கேற்ற. மாநில சுகாராத் துறை செயலாளர்கள், தடுப்பூசி (Corona Vaccine) போடும் பணிகள் தொடர்பாக மாநில அரசுகள் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்த தகவல்களை அளித்தனர். கூட்டத்தில் தடுப்பூசி ஒத்திகை குறித்த ஆலோசனையும் நடைபெற்றது.


கூட்டத்திற்கு, பின்னர் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கு தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், ஜனவரி 2ம் தேதி நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகையை நடத்த, அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும்  ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும்மத்திய அரசு கூறி உள்ளது.  ஒத்திகை நடவடிக்கையை 3 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் கடினமான மலைப்பகுதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளிலும், இந்த ஒத்திகை நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளன.


தமிழகத்தை (Tamil Nadu) பொறுத்தவரை சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறி உள்ளார்.


ALSO READ : 

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி

LINK

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (Central Drugs Standard Control Organisation - CDSCO) கீழ் உள்ள  நிபுணர் ஜனவரி 1 ம் தேதி கூடி மூன்று மருந்து நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் அவசர-பயன்பாட்டிற்கான அங்கீகார விண்ணப்பத்தை பரிசீலிக்கும் . ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தயாரிக்கும்  ஃபைசர் (Pfizer), சீரம் நிறுவனம் (Serum Institute of India), மற்றும் கோவேக்ஸின் (Covaxin)தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் (Bharat Biotech) ஆகியவை இந்த மூன்றும் மருந்து நிறுவனஙக்ள் ஆகும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!