நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொத்தமல்லி சட்னி வாசனைக்கே அத்தனை தோசை சாப்பிடலாம்!

 

வீட்டுக்கு அருகே மளிகைக் கடையில் எப்போதும் கிடைக்கும் பொருளாக கொத்தமல்லி இலை இருக்கிறது.


Dhosai chutney recipes, kothamali chutney கொத்தமல்லி இலை, உடல் நலத்திற்கு மிகவும் தேவையானது. குறிப்பாக ரத்த அழுத்தத்தை சீராக்குவது, பித்தம் தொடர்பான பிரச்னைகளுக்கு இது உகந்தது என்கிறார்கள். தவிர, கொத்தமல்லி இலை மூலமாக செய்யப்படும் ரசம், துவையல் ஆகியன டேஸ்டாகவும் இருக்கும்.

வீட்டுக்கு அருகே மளிகைக் கடையில் எப்போதும் கிடைக்கும் பொருளாக கொத்தமல்லி இலை இருக்கிறது. இந்தத் தழைகளை பயன்படுத்தி சட்னி தயார் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

VIDEO LINK CHUTNEY


கொத்தமல்லி சட்னி தயாரிக்க தேவையான பொருட்கள்:

 கொத்தமல்லி – 1 கட்டு,

 வெங்காயம் – 2, 

தக்காளி – 1, 

மிளகாய் – 5,

 தேங்காய் – 1/2 கப் (துருவியது),

 உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்,

 கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்,

 பூண்டு – 2 பற்கள், 

இஞ்சி – 1 துண்டு,

 புளி – சுண்டைக்காய் அளவு,

 உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு

கொத்தமல்லி சட்னி செய்முறை:
ஹோட்டல் ஸ்டைலில் கொத்தமல்லி சட்னி செய்முறை வருமாறு: 

கொத்தமல்லி தழையில் இலைகளை ஆய்ந்து, நீரில் அலசிக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியை சூடாக்கி, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு, வரமிளகாயினை போட்டு வதக்கவும்.இவை மூன்றும் சிவந்ததும், கொத்தமல்லி இலையினை போட்டு வதக்குங்கள்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, உப்பு, ஒரு துண்டு இஞ்சி, பூண்டு பற்கள், புளியினை போட்டு நன்கு வதக்கவும். பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள். இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தால் சுவையான கொத்தமல்லி சட்னி தயார். ரொம்பக் கூழாக அரைக்காமல் இருந்தால், கொத்தமல்லி சட்னி சாப்பிடும் பதத்தில் இருக்கும்.


ALSO READ : 

சீனாவில் ஆண்டுதோறும் 35 பி. கிலோ உணவு வீண்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!