நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆசியாவின் பெரும்பணக்காரர் ஆனார் தண்ணீர் பாட்டில் நிறுவன அதிபர் சோங் சான்சன்..!

சீனாவில் தண்ணீர் பாட்டில் நிறுவன அதிபரான சோங் சான்சன் முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் பெரும் பணக்காரர் ஆகியுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த சோங் சான்சன் வாண்டாய் பயாலஜிக்கல் பார்மசி, நோங்பு ஸ்பிரிங் ஆகிய நிறுவனங்களின் அதிபர் ஆவார். இவரது நிறுவனங்கள் ஊடகம், காளான் வளர்ப்பு, நலவாழ்வு ஆகிய துறைகளிலும் காலூன்றியுள்ளன.

புளூம்பெர்க் நிறுவனத்தின் கணக்குப்படி இந்த ஆண்டில் இவரின் சொத்து மதிப்பு 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 5 லட்சத்து 68 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் சொத்து மதிப்பில் இந்தியாவின் முகேஷ் அம்பானியை முந்தியுள்ள சோங் சான்சன், ஆசியாவின் பெரும்பணக்காரராக விளங்குகிறார்.

உலக அளவில் பதினோராவது பெரும்பணக்காரராக விளங்குகிறார். ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 5 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!