நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆஸ்திரேலியா சிட்னி துறைமுகத்தில் புத்தாண்டு வாண வேடிக்கையை மக்கள் நேரில் காண முடியாது

 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள துறைமுக பாலப் பகுதியில் ஒவ்வொரு புத்தாண்டு இரவு வேளையிலும் நடைபெறும் வாண வேடிக்கை உலகப்புகழ் பெற்றதாகும்.

சிட்னி, 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள துறைமுக பாலப் பகுதியில் ஒவ்வொரு புத்தாண்டு இரவு வேளையிலும் நடைபெறும் வாண வேடிக்கை உலகப்புகழ் பெற்றதாகும். இதை நேரில் காண சுமார் 10 லட்சம் மக்கள் வரை கூடுவார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டு வழக்கம்போல் இங்கு வாண வேடிக்கை நடைபெறும் என்றாலும், கொரோனா தொற்று அபாயம் காரணமாக மக்கள் அப்பகுதியில் திரளாகக் கூடி நேரில் காண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிட்னி நகரம் அடங்கிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் கிளாடிஸ் பெரிஜிக்லியான், சிட்னி நகரமையப் பகுதியில் வசிப்பவர்கள் புத்தாண்டைக் கொண்டாட தலா 10 விருந்தினர்களை அழைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் இப்பகுதிக்கு வருவதற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரான சிட்னியில் புதிதாக 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கடந்த 10-ந் தேதி முதல் இத்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!