நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தடுப்பூசி போட நினைவூட்டல்; ஜெர்மனியில் ‘சிரிஞ்ச்’ வடிவத்தில் விமானப் பயணப் பாதை

 

‘ஃபிளைட்ரேடார்24’ எனும் இணையத்தளத்தில் ‘சிரிஞ்ச்’ வடிவிலான இந்தப் பயணப் பாதை காண்பிக்கப்பட்டது


ஐரோப்­பா­வில் கொவிட்-19 தடுப்­பூசி மருந்­து­கள் போட்­டுக்­ கொள்­வதை மக்­க­ளி­டம் நினை­வு­ப­டுத்­தும் வித்­தி­யா­ச­மான முயற்­சியை அந்­நாட்டு விமானி ஒரு­வர் முன்­னெ­டுத்­தார்.

தடுப்­பூ­சி­யைப் போட உத­வும் ‘சிரிஞ்ச்’ சாத­னத்­தின் வடி­வி­லான 200 கிலோ மீட்­டர் தூர பய­ணப் பாதை­யில் அவர் விமா­னத்தை இயக்­கி­யுள்­ளார்.

சேமி கிரே­மர் எனும் அந்த 20 வயது விமானி, தெற்கு ஜெர்­ம­னி­யில் ‘லேக் கான்ஸ்­டன்ஸ்’ எனும் பகு­திக்கு அருகே விமா­னத்தை இயக்­கு­வ­தற்கு முன்பு, விமா­னத்­தில் தாம் செல்­ல­வி­ருக்­கும் பாதையை ‘ஜிபி­எஸ்’ சாத­னத்­தில் திட்­ட­மிட்­டார். ‘சிரிஞ்ச்’ வடி­வி­லான அந்­தப் பய­ணப் பாதை ‘ஃபிளைட்­ரே­டார்24’ எனும் இணை­யத்­த­ளத்­தில் காண்­பிக்­கப்­பட்­டது.

“தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள பல­ரும் இன்­னும் விரும்­பா­தது எனது கவ­னத்­திற்கு வந்­தது. அவர்­க­ளது சிந்­த­னையை மாற்றி தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள ஊக்­கு­விக்­கவே நான் இந்த நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­னேன்,” என்று ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னத்­தி­டம் திரு கிரே­மர் நேற்று முன்­தி­னம் கூறி­னார்.

எனி­னும் தமது பய­ணம், மக்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தற்­கான உத்­த­ரவு அல்ல என்­பதை அவர் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டத்தை ஜெர்­மனி நேற்று முன்­தினம் தொடங்­கி­யது. இவ்­வாண்டு இறு­திக்­குள் 1.3 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தடுப்­பூசி மருந்­து­க­ளைச் சுகா­தார அதி­கா­ரி­க­ளி­டம் விநி­யோ­கிக்க அந்­நாட்டு அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ளது. ஜன­வ­ரி­யில் இருந்து விநி­யோ­கிக்­கப்­படும் தடுப்­பூ­சி­களின் எண்­ணிக்கை வாரத்­திற்கு 700,000ஆக இருக்­கும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், ஜெர்­ம­னி­யில் கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட முதல் நப­ராக 101 வயது மாது ஒரு­வர் விளங்­கு­கி­றார். வடக்கு ஜெர்­ம­னி­யில் உள்ள முதி­யோர் இல்­லம் ஒன்­றில் அவர் வசிக்­கி­றார்.

முதி­யோர் இல்­லங்­களில் வசிப்­போ­ருக்கும் அங்கு பணி­பு­ரி­ப­வர்­களுக்­கும் தடுப்­பூசி போட ஜெர்மானிய அரசாங்கம் முன்­னு­ரிமை அளிக்­கிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!